செல்வசந்நிதி தேர்த் திருவிழா – வெள்ளம்போல் பக்தர்கள் (படங்கள், காணொளி இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 08/09/2014 (திங்கட்கிழமை)
தொண்டைமனாறு செல்வசந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 14 ஆம் திருவிழாவும் அதிக பக்தர்களைக் கொள்ளும் முக்கிய திருவிழாவுமான தேர்த் திருவிழா இன்று முற்பகல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இன்று காலை சுமார் 8 மணியளவில் ஆரம்பித்திருந்த பூஜைகளைத் தொடர்ந்து அடியார்களின் பலத்த அரோகரா கரகோசத்திற்கு மத்தியில் தேர் உலா சுமார் 09.30 மணியளவில் இடம்பெற்றது.
தேர்த் திருவிழாவைத் தரிசிக்க வந்திருந்த பக்தர்களால் ஆலய வீதிகள், மடங்கள் ஆலயத்திற்குக் செல்லும் வீதிகள் என்பன நிறைந்திருந்ததைக் காணக் கூடியதாகவிருந்தது. மேலும் காவடி, தூக்குக் காவடி, கரும்புக் காவடி பாற்ச்சொம்பு ஆகிய
நேர்த்திகளாலும், மற்றும் பஜனைகள் வீதிகள் தோறும் வியாபித்திருந்தன.
ஏராளமான பக்தர்களின் வருகையைக் கருத்திற் கொண்டு பல்வகை வியாபாரங்களும் சூடு பிடித்திருந்தது.
குறித்த தேர்த் திருவிழாவின் நிகழ்வுகள் எமது இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்புச்செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் நாளை தீர்த்தத் திருவிழாவின் நிகழ்வவுகளும் நேரடியாக எமது இணையதளத்தினூடாகவோ (www.valvettithurai.org) ஒளிபரப்புச்செய்யப்படவுள்ளது.
தேர்த்திருவிழாவின் காணொளி மற்றும் முழுப் படத் தொகுப்பினையும் கீழே காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.