தொண்டைமனாற்று கடற்கரை உல்லாசப் பிரயாணிகளை தற்பொழுது கவர்ந்து வருகின்றது. கடந்த வருடம் வலிகாமம் பிரதேச சபையால், தொண்டைமானாறு ஏரி பாக்கு நீரினையுடன் கலக்கும் பகுதியான தொண்டைமனாற்று ஆற்றுவாய் பகுதியில் உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் வண்ணம் சில புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து பிரயாணிகள் வருகை மெதுவாக அதிகரிக்கக் தொடங்கியது.
இப்பகுதியை மேலும் சிறப்பிக்கும் வண்ணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த Bala Boat scooter service centre என்னும் நிறுவனத்தால், உல்லாச படகுத்துறைக்குரிய (Boating place) படகுகள் மற்றும் மிதவைகள் போன்றன தற்பொழுது இப்பகுதியில் பாவனையில் விடப்பட்டுள்ளன. இவை தகுந்த அனுமதியைப் பெறுள்ளன.
தற்பொழுது விடுமுறை தினங்களில் நூற்றுக்கு மேற்பட்டோர் இப்பகுதிக்கு வந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.