வல்வை கப்பலுடையவர் தெப்பத் திருவிழா நேற்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 05/08/2016 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை உதயசூரியன் வீதியில் அமைந்துள்ள கப்பலுடையவர் பிள்ளையார் கோயிலின் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நிகழ்வான தெப்பத் திருவிழா நேற்று இரவு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
நேற்று மாலை இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, விநாயகர் சுவாமி மேளதாள வாத்தியங்களுடன் உதயசூரியன் கடற்கைரை வழியாக கடல்மேல் சென்று, ஊரணி தொடக்கம் ஊரிக்காடு வரையான கடற்பகுதியில் சிலமுறை பவனி வந்து, ஆலயம் திரும்பினார்.
சுவாமி கடலில் பவனி வருவதற்காக, சுவாமி, பிரதமகுருக்கள், தவில் - நாதஸ்வரக் கலைஞர்கள் மற்றும் அடியார்கள் சிலரை காவும் வண்ணம் இரண்டு படகுகள் ஒன்றிணைக்கப்பட்டு வாழை மரங்களால் அலங்கரிக்கப்பட்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது.
யாழ்பாணத்தில் இவ்வாறனதொரு திருவிழா கடந்த பல வருடங்களாக இடம்பெற்று வருவது இங்கேயே என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.