பலத்த காற்று காரணமாக படகுகள் கரைக்கு ஏற்றப்படுகின்றன, சில இடங்களில் மின் துண்டிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2016 (திங்கட்கிழமை)
வங்காள விரிகுடாவில் வட மேற்குத் திசையில் நகர்ந்து நாளை காலை தமிழ் நாட்டின் கரையைக் கடக்கவுள்ள தீவிர தாழமுக்கம் காரணமாக பாக்கு நீரினைப் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதுடன் கடலும் கொந்தளிப்புடன் காணப்பட்டு வருகின்றது.
பலத்த காற்றில் இருந்த மீன் பிடிப் படகுகளை பாதுகாக்கும் பொருட்டு, வழமையாக கடலினுள் நிறுத்தி வைக்கப்படும் படகுகளை மீனவர்கள் கரைக்கு எடுத்துவந்து பாதுகாப்பாக வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை பலத்த காற்றுக் காரணமாக சில பகுதிகளில் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் மின் இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டுள்ளன.
கீழே படத்தில் வல்வை ஆதிகோவில் பகுதியில் படகு ஒன்றை கரைக்கு எடுத்துவரும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டிருப்பதை காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.