தென்மண்டல காரத்தே போட்டியில் பதக்கங்கள் வென்ற இலங்கைச் சிறுவர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/09/2017 (சனிக்கிழமை)
தமிழகம் பரமக்குடியில் தென்மண்டல அளவிலான காரத்தே போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட திரு.மோகன்ராஜின் மகன் டினேஷ்கரன் 14 வயது பிரிவில் கலந்து கொண்டு கட்டா, குமித்தே ஆகிய இரு பிரிவிலும் முதலாவது இடம் பிடித்து இரண்டு தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார்.
இதே போட்டியில் திருகோணமலையை பூர்வீகமாகக் கொண்ட R.கம்சன் என்ற சிறுவனும் 11வயது பிரிவில் கலந்து கட்டா போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.
இப்போட்டியில் சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதங்கங்களும் நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.