முதன்முறையாக SOLAS செயற்திட்டத்தை இலங்கை நடைமுறைப்படுத்துகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 16/06/2016 (வியாழக்கிழமை)
இலங்கையில் முதன் முறையாக "நடுகடலில் உயிரை பாதுகாத்தல் (SOLAS)" செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தல் அமுலில் வருகின்றது. துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் வழிக்காட்டல்களின் கீழ் கப்பற்துறையுடன் தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்த பின்னர் இச்செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
நடுகடலில் உயிரை பாதுகாத்தல் (SOLAS - Safety Of Life At Sea) என்பது ஐக்கிய நாடுகள்சபையின் கடல் சார் அங்கமான சர்வதேச சமுத்திரவியல் நிறுவனத்தின் (International Maritime Organisation - IMO) 4 தூண்களில் முதலாவதாகக் கருதப்படும் கடலில் மாலுமிகளின் உயிர்களைப் பாதுகாப்பது சம்பந்தமான விதிமுறைகள் அடங்கிய தொகுப்பு ஆகும்.
இது கப்பல்களில் தொழில் புரிவோர், கப்ல்களைக் கட்டுபவர்கள், கப்பல் சொந்தக் காரர்கள், கப்பலைப் பதிவும் செய்யும் நாடுகள் எனப் பல துறையினருக்கு அறிவுறுத்தல்களை வழங்குகின்றது. இவற்றின் விதிகளைக் கடைப் பிடிப்பது என்பது அத்தியா வசியமான வொன்று என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
எதிர்வரும் யூலை மாதம் முதலாம் திகதி முதல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுமென வணிக கப்பற் சேவைகள் செயலகத்தின் அத்தியட்சக ஜெனரால் அஜித் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
'இலங்கை சர்வதேச சமுத்திரவியல் நிறுவனத்தின் உறுப்பு நாடாகும். அதன் அடிப்படையில் சர்வதேச போக்குவரத்து தொடர்பாக கொள்கைகள் காணப்படுகின்றன. எனவே உறுப்பு நாடு என்ற அடிப்படியில் இலங்கையானது அக் கொள்கைகளை பின்பற்ற கடமைபட்டுள்ள்ளது.
அதன் அடிப்படையில் உயிர் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளிற்கேற்பவே தாம் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், இப்புதிய சட்டம் யூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இச்செயற்றிட்டம் ஒக்டோபர் மாதம் முதல் உத்தியோகப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் என அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சமுத்திரவியல் நிறுவனமானது (IMO) 1974 ஆம் ஆண்டு சர்வதேச வணிக கப்பற்துறையில் பின்பற்றப்பட வேண்டிய பொது சட்டதிட்டங்களை அறிமுகப்படுத்தியது. பின்னர் இது பற்பல மாற்றங்களைக் (SOLAS Amendments) கண்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் சர்வதேச சமுத்திரவியல் நிறுவனத்தின் இலங்கை முகவராக வணிக கப்பற் சேவைகள் செயலகம் செயற்படுகின்றது. துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சுடன் தொடர்புடைய நிறுவனமாகவே வணிக கப்பற் சேவைகள் செயலகம் செயற்படுகின்றது.
சமுத்திரவியல் சந்தை நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து ஏற்பாடுகள் அதனுடன் தொடர்புடைய சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்துவதே இந் நிறுவனத்தின் செயற்பாடாகும். அதன் அடிப்படையிலேயே 'நடுகடலில் உயிரை பாதுகாத்தல் (SOLAS)' எனும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
கொள்கலன்கலன் கப்பல்களின் (Container Ships) பாதுகாப்பை அதிகரித்தல் , கப்பல்களின் ஸ்திரத்தன்மையினை மற்றும் நடுநிலை தன்மையினை பாதுகாத்தல், கொள்களன்களை உரிய முறையில் பாதுகாத்தல் மற்றும் சுற்றாடல் பாதிப்புக்களை குறைத்தல் ஆகியனவற்றை குறிக்கோளாகக் கொண்டு இக்கொள்கை இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
அதன் அடிப்படையில் சான்றிதழ்களை வழங்குவதற்குரிய வழிக்காட்டல்கள் மற்றும் அறிவுறுத்தகள் உள்ளடங்கிய செயன்முறையினை வணிக கப்பற் சேவைகள் செயலகம் பொது மக்களிற்கு அறிவித்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கையெடுத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.