பாரம் தூக்குதல் பயிற்சி நிலையத்திற்கு சிவாஜிலிங்கம் 5 லட்சம் நிதியுதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 23/01/2017 (திங்கட்கிழமை)
வட மாகாண பாரம் தூக்குதல் அமைப்பினால் நடத்தப்படும் பாரம் தூக்குதல் பயிற்சி நிலையத்தில் பாரம் தூக்குதல் போட்டிகளில் பங்கு கொள்ளல் மற்றும் இத்துறையில் ஈடுபடும் வீரங்கனைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் பயிற்சி நிலையத்தில் அமைப்பின் தலைவர் இளம்பிறை தலைமையில் கடந்த 20-01-2017 அன்று இடம்பெற்றது.
சீரான கட்டிட வசதியின்றி இந்தப் பயிற்சி நிலையம் இயங்கினாலும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பற்றக் கூடிய வகையிலான திறன் வாய்ந்த வீராங்கனைகள் அவ்வமைப்பில் அங்கம் வகிக்கின்றனர். அதற்கமைய பயிற்சிகள் இங்கு இடம்பெறுகின்றன. இதனை முழுமையாக முன்னெடுத்துச் செல்வதற்கு பொருளாதார நெருக்கடி தடையாக இருக்கின்றது.
எனினும் 2015 ஆம் ஆண்டு தேசிய மட்டத்தில் இடம்பெற்ற போட்டியில் யாழ்ப்பாணத்திலிருந்து பங்கு பற்றிய வீரங்கனை ஒருவர் தங்கம் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிக்கு செல்வதற்கு தயாராக இருந்த போதிலும் கொழும்பு பயணம் செல்வதற்கான வசதியில்லாமையினால் திறனை வெளிக்கொணர முடியவில்லை.
பொது நலவாய விளையாட்டுப் போட்டிக்கு வட மாகாண ஆழுனரின் நிதி உதவியின் மூலம் சென்ற ஒருவர் வெள்ளிப் பதக்கம் வென்று பெருமையைத் தேடித் தந்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடலின் போது வ்ட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தமது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 500000.00 வழங்குவதற்கு உறுதியளித்துள்ளார். அத்துடன் சிவன் அறக்கட்டளை நிறுவனத்தின் இயக்குனர் கணேஸ்வரன் தம்முடைய சொந்த நிதியிலிருந்து ஒரு இலட்சம் ரூபா தருவதாகவும் சத்துணவு வழங்கவும் உதவி செய்வதாகவும் உறுயளித்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.