கடற்கரை வழியாக இலங்கையை சுற்றும் சாதனையாளர் வல்வையில்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/10/2023 (சனிக்கிழமை)
இலங்கையைச் சுற்றி பயணித்து வரும் சாதனையாளர் உடுகம சூரி நேற்று முற்பகல் வல்வையை வந்தடைந்தார். இவர் தொடர்ந்து மன்னார் ஊடாக கொழும்பைச் சென்றடையவுள்ளார்.
காலி அல்லிப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 52 வயதான தடகள பயிற்சியாளரான சமன் உடுகம சூரி என்பவர் கடந்த செப்டெம்பர் 8 ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரில் இருந்து உலக சாதனை நடைப் பயணத்தை ஆரம்பித்தார்.
இலங்கையின் தென் கரை ஓரத்தினூடாகப் பயணித்து கிழக்கு கரையோரம் வழியே முல்லைத்தீவு வடமராட்சி கிழக்கு கடற்கரை வழியே நடையாகவும் ஓட்டமாகவும், நீந்தியும் தனது சாதனைப் பயணத்தை முன்னெடுத்து வருகின்றார்.
கீழே திரு.உடுகம சூரி வல்வை கொத்தியால் கடற்கரையை வந்தடைந்த போது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.