வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் திறந்த மண்டபம் இன்று திறப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2016 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் புதிதாக திருத்தி வடிவமைக்கப்பட்ட திறந்த மண்டபம் இன்று சமய கிரியைகளுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 0830 - 0930 வரையான சுபவேளையில், கோயிலின் பிரதான குரு தண்டபாணிக தேசிகர் அவர்களின் கிரியைகளைத் தொடர்ந்து மண்டபம் அடியார்களின் பாவனைக்கு விடப்பட்டுள்ளது.
கோயிலின் முகப்பின் இடது பக்கத்தில் பிரதான வாசலுக்கும், கடந்த வருடம் புதிதாக அமைக்கப்பட்ட இயந்திர அறைக்கும் இடையேயுள்ள பகுதியிலேயே குறித்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த மண்டப்பத்திற்கான உபயத்தினை வல்வெட்டித்துறை ஆதிகோவிலைச் சேர்ந்த அமரர்கள் தேவலிங்கம், செல்வராசா மற்றும் இராசமணி குடும்பத்தினர் வழங்கியுள்ளனர்.
மண்டப வேலைகள் கடந்த 6 ஆம் திகதி 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.