கடலுக்குள்நின்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வல்வையில் இன்று மாலை போராட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/01/2017 (சனிக்கிழமை)
தமிழகத்தில் இடம்பெற்று வந்த தமிழர்களின் கலாச்சார வீரம் நிறைந்த விளையாடுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்கு (ஏறு தழுவுதல்) இந்திய உயர் நீதிமன்றம் தடை வழங்கியதைத் தொடர்ந்து தமிழகத்தில் இளைஞர்களால் பெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது யாவரும் அறிந்ததே.
இதற்கு ஆதரவு தெரிவித்து இன்று வல்வெட்டித்துறையில் கடலுக்குள் நின்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள இந்த ஆதரவுப் போராட்டத்தில், ஆர்ப்பாட்டக்காரர்கள் கடலுக்குள் நின்று தமது எதிர்ப்பினைத் தெரிவிக்கவுள்ளனர்.
குறித்த இந்த நிகழ்வை வடமராட்சி இளைஞர் கலாச்சார மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.