ஹாட்லிக் கல்லூரிக்கு புதிய பஸ் பிரதமரினால் இன்று வழங்கப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 06/06/2016 (திங்கட்கிழமை)
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரிக்கு புதிய பஸ் ஒன்று பிரதமர் அலுவலகம் இன்று வழங்கப்பட்டுள்ளது. கையளிப்பு வைபவம் இன்று காலை மிகவும் எளிமையாக ரெம்பிள் ரீஸ் (Temple trees) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. புதிய பஸ் இனுடைய சாவியை கல்லூரி அதிபர் முகுந்தன் பெற்றுக் கொண்டார்.
இந்த வைபவத்தில் கல்வித்துறை அமைச்சர் அகிலா விராஜ் காரியவாசம் (Minister of Education Akila Viraj Kariyawasam), State Minister of Education . Radhakrishnan, Minister of Education, Cultural Affairs, Sports and Youth Affairs of Northern Provincial council, Thambyrajah Gurukularajah பாராளுமன்ற உறுப்பினர்கள் M.A.சுமந்திரன், திருமதி விஜயகலா மகேஸ்வரன் மற்றும் டக்லஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் ஹாட்லி கல்லூரி பழைய மாணவர் மன்றம் கொழும்பு கிளையின் தலைவர் Dr.V.ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர்களான திரு.அருமைநாயகம் மற்றும் பேராசிரியர் நடராஜசுந்தரம், Hartley Trust இனுடைய பிரதிநிதிகள், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் (Secretary of the School Development Society) திரு.சுப்பிரமணியம், ஹாட்லி கல்லூரி பழைய மாணவர் மன்றம் கொழும்பு கிளையின் உறுப்பினர்கள், சில மாணவர் தலைவர்கள் மற்றும் சில நலன் விரும்பிகள் கலந்து கொண்டனர்
கடந்த வருடம் நல்லாட்சி அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார்.
இதன்போது ஹாட்லி கல்லூரிக்கும் சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் தமது கல்லூரிக்கு பஸ் ஒன்று வழங்கப்பட வேண்டுமென்று கல்லூரி நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கிணங்கவே புதிய பஸ்ஸை வழங்குவதற்கு பிரதமர் அலுவலகம் நடவடிக்கை எடுத்திருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.