யாழில் முதன்முதலாக புறா பந்தயம், பருத்தித்துறையைச் சேர்ந்த புறா நான்காம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/03/2018 (வெள்ளிக்கிழமை)
உலகின் மிகப் பழமையான விளையாட்டுக்களில் ஒன்றான புறாக்களிடையிலான பந்தய போட்டி அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ‘பபுகயா’ (பந்தயப் புறாக்கள் கழகம் யாழ்ப்பாணம் :ரேஸிங் பீஜின்ஸ் கிளப் ஜெவ்னா) வின் ஏற்பாட்டில் குறித்த பந்தய போட்டி நடைபெற்றது.
முதல் முறையாக 125 கிலோ மீற்றர் தூரத்துக்கான பந்தயம் மார்ச் முதல் வாரத்தில் இடம்பெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் ஞாயிற்றுக்கிழமை யாழ். நகரில் உள்ள விடுதியில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தின் பிரபல மருத்துவ நிபுணரும், நீண்ட காலமாகப் புறா ஆர்வலராக இருந்து வருபவருமான மருத்துவர் கே.சுரேஷ்குமார் தலைமை அதிதியாகக் கலந்துகொண்டு வெற்றிபெற்ற புறாக்களின் உரிமையாளர்களுக்குப் பரிசில்களை வழங்கி வைத்தார்.
குருநகரைச் சேர்ந்த எம்.அஜித் குமாரின் இரு புறாக்கள் ஒரு மணி 40 நிமிடங்களில் பந்தயத் தூரத்தைக் கடந்து முதல் இரு பரிசுகளைத் தட்டிச் சென்றன. சங்கானையைச் சேர்ந்தவரான ரி.நிதர்சனின் புறா மூன்றாம் இடத்தையும் பருத்தித்துறையைச் சேர்ந்த எஸ்.காந்தரூபனின் புறா நான்காவது இடத்தையும் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த எஸ்.பிரியதர்ஷனின் புறா
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.