யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிறிரஞ்சன் இந்திரலிங்கம் அவர்கள் மே மாதம் 9ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார் இந்திரலிங்கம் சந்திராவதி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிவரஞ்சன் மற்றும் கனடாவில் வசிப்பவர்களான ஜெயரஞ்சன், யோகரஞ்சன் மற்றும் மாவீரர் உதயரஞ்சன் மற்றும் கனடாவில் வசிப்பவர்களான நிமலரஞ்சன், விஜயரஞ்சன்,டென்மார்க்கில் வசிப்பவரான சுபாஷினி இந்தியாவில்
வசிப்பவரான குமுதினி, கனடாவில் வசிப்பவர்களான சாந்தினி, சுகன்யா ஆகியோரது சகோதரரும்,
மற்றும் சசிலா, சுதர்சினி, ராஜி, ரவீந்திரகுமார், ரமேஸ்,சேகர் ராகவன், ஆகியோரின் மைத்துனரும்,
மோனிசா, சந்தோஸ், சியா, சுகந்தன், தனு, கிருசாந்த், பிரசாந்த் ஆகியோரின் தாய்மாமாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் மே மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிமுதல் இரவு 9 மணிவரை இல 1810 Albion Rd, Etobicke வில் அமைந்துள்ள Glendale Funeral Homeல் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர், மறுநாள் மே மாதம் 15ம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிமுதல் 11:30 மணிவரை அதே இடத்தில் ஈமக்கிரியைகள் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.