இலங்கை யாழ்/நெடியகாடு வல்வெட்டித்துறை பிறப்பிடமாகவும், தற்போது திருச்சி KK நகரை வசிப்பிடமாக கொண்ட தீபாராம் டிரேடர்ஸ் நிறுவன உரிமையாளருமான அரிச்சந்திரபோஸ் அவர்கள் நேற்று (06/08/2016) சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் கதிர்வேல்பின்ளை ஆறுமுகசாமி - சீதாலட்சுமி அவர்களின் அன்பு மகனும்,
கணேசமூர்த்தி சந்திரகண்டு ஆகியோரின் அன்பு மருமகனும்,
அமிர்தவதனா(தெய்வம்)அவர்களின் அன்பு க்கணவரும்,
ஜெயதீபா அவர்கள் அன்பு தகப்பனாரும்,
ரமணன் அவர்களின் மாமனாரும்,
அர்ச்சனா, அபிநயா, அஜத் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சுபாஸ்சந்திரபோஸ், மலர்ரோகினி அம்மா, காந்திமதி, சரத்சந்திரபோஸ், பத்மாவதி, ஜெயச்சந்திரபோஸ், செல்லச்சந்திரபோஸ், இந்துமதி, ஞானச்சந்திரபோஸ், பானுமதி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஆழ்ந்த வருத்துடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 11.08.2016 வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு வீட்டில் இடம்பெற்று திருச்சி ஓயாமாரி மைதானத்தில் தகனம் செய்யப்படும் என்பதனை அறியத்தருகிறோம்.
தகவல்
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், குடும்பத்தினர்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
k.S.Thurai (Denmark)
Posted Date: August 08, 2016 at 20:30
எனது பாடசாலைக்கால நண்பரின் பிரிவானது துயர் தருகிறது.. சிதம்பராவில் படிக்கும் காலத்தில் தனியாகக் கேட்கும் கரகரப்பான குரல், வேக நடை, சாதிக்க வேண்டுமென்ற துடிப்பு, சூழலுக்கு ஏற்ப தாக்குப்பிடிக்கும் ஆற்றல் கொண்டவர் என் சிறு பராய நண்பர் அரிச்சம்.. இன்று அவர் இல்லை.. அன்னாரின் அத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்..
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.