மரண அறிவித்தல் - திரு கந்தசாமி காண்டீபன் (தில்லை நடராசா)
பிரசுரிக்கபட்ட திகதி: 04/07/2015 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல்
திரு கந்தசாமி காண்டீபன் (தில்லை நடராசா)
பிறப்பு : 19 .09.1962 — இறப்பு : 04.07.2015
யாழ். வல்வெட்டித்துறை தெணியம்பையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை வளசரவாக்கத்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி காண்டீபன் அவர்கள் 04-07-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, பவளக்கொடி(மணி) தம்பதிகளின் அன்பு மூத்த மகனும்,
நவரத்தினம் சவுந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகுணா(உமா) அவர்களின் அன்புக் கணவரும்,
பிறையேந்தி, செவ்வந்தி, சரவணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வளர்மதி(டென்மாரக்), முரளி(இலங்கை), மதுமதி(இந்தியா), இந்துமதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திவ்யகுமார்(திவ்வியன்), தியா(டென்மார்க்), துவாரகா(இந்தியா), அஷ்விகா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திபாகர், தீபிகா, பரிதியன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
யோகசுந்தரம்(டென்மார்க்), தயாபரன்(இந்தியா), பிறேம்குமார்(கனடா), மாலதி(இலங்கை), பத்மாவதி, வனிதாவதி, கலாவதி, புவனேந்திரன், கிரிதரன், சரவணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாலகிருஷ்ணன், இராசரெத்தினம், சின்னப்பிள்ளை, குணவதி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
இரகுபதி, ஸ்ரீபதி, கலாபதி, மதனலீலா, சற்குணலீலா, குமாரலீலா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.