தீவிரமடையும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி காலநிலை - அடுத்த மூன்று தினங்களுக்கு மழை!
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2017 (வெள்ளிக்கிழமை)
வடகிழக்குப் பருவமழை மீண்டும் வலுப்பெறவுள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியும், அத்துடன் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் இணைந்துள்ளது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்து வரும் மூன்று நாட்களில் மேற்கு திசையை நோக்கி நகரவுள்ளது. இதனால் அடுத்த மூன்று தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதே வேளை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்
நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் எதிர்வரும் சில நாட்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு , ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், மேற்கு சப்ரகமுவ மற்றும் மத்திய மகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பிற்பகல் 2.00 மணியின் பின்னர் பெய்யும் எனவும்,
மேற்கு , வடமேற்கு , சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் காலைவேளைகளில் பனிமூட்டமான காலநிலை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக திருகோணமலை காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையிலான கடற்பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.