பலத்த காற்றுடன் கூடிய கடற் கொந்தளிப்பு காரணாமாக மீன்பிடித் தொழில் பாதிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/12/2014 (சனிக்கிழமை)
வடகீழ் பருவப்பெயர்ச்சி காலநிலை (North east monsoon) காரணமாகவும் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாகவும் பலத்த காற்று மற்றும் இதனால் உண்டான கடற் கொந்தளிப்பு காரணாமாக யாழ் குடாநாட்டின் தொண்டைமானாறு தொடக்கம் பருத்தித்துறை வரையான பாக்கு நீரிணையின் கடற்பகுதியில் மீன்பிடித் தொழில் கடந்த சில நாட்களாக பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
யாழின் வடமராட்சியை அண்டிய பாக்கு நீரிணையில் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 20 கடல் மைல் வேகத்தில் வீசுவதுடன், கடலில் அலை சுமார் 3 மீட்டர் அளவுக்கு மேல் ஏற்படுவதையும் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது
வழமையாக மீன் பிடித் தொழிலில் ஈடுபடும் நூற்றுக் கணக்கான படகுகள் மற்றும் வள்ளங்களில் கடந்த சில நாட்களில் ஒரு சில படகுகளே கடற் தொழிலில் ஈடுபட்டதைக் காணக் கூடியதாகவிருந்தது. இதனால் கடந்த சில நாட்களாக கடல் உணவுகளின் விலை மிகவும் அதிகரித்துள்ளது.
கீழே படத்தில் வல்வெட்டித்துறை ஆதிகோவில் பிரதேசத்தில் காற்று மற்றும் கடற்கொந்தளிப்பையும் இதன் காரணமாக கரையில் கட்டப்பட்டுள படகுகளையும் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.