வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழக வருடாந்த இல்ல தடகள விளையாட்டு விழா நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2014 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 2014 ஆம் ஆண்டிற்குரிய வருடாந்த இல்ல தடகள விளையாட்டு விழா நாளை மறுதினம் 26.04.2014 (சனிக்கிழமை) பி.ப. 3.30 மணிக்கு கழக மைதானத்தில், கழகத் தலைவர் திரு.திரு.K.N.தேவதாஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.
நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு.S.சோதிமயம் (ஓய்வு பெற்ற வைத்தியர்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு.பா.முகுந்தன் (மாவட்ட உதைபந்தாட்ட பயிற்றுனர்) அவர்களும், திரு.ந.அனந்தராஐ, (நகரசபைத் தவிசாளர், வல்வெட்டித்துறை நகரசபை) அவர்களும், திரு.மா.நவநீதமணி (தலைவர், பருத்தித்துறை உதைபந்தாட்டலீக்) அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
நிகழ்வுகள் வரிசையில் கழக வீர வீராங்கனைகளுக்கான தடகள விளையாட்டுக்கள் மற்றும் இடைவேளை நிகழ்வுகளுடன், வெளிக் கழகங்களுக்கான நிகழ்வுகளாக கிட்டி இழுத்தல் (பலம் பார்த்தல்), 4 x 400 மீட்டர் அஞ்சல் ஓட்டம், தலையணைச் சண்டை மற்றும் கிறீஸ் கம்பம் ஏறுதல் ஆகிய நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாக கழக நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.