வல்வை சிவன் கோவில் தேர் திருவிழா, பெருமளவு பக்தர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2014 (சனிக்கிழமை)
இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய சிவன் ஆலயங்களில் ஒன்றானதும், திரு.பிரபாகரன் அவர்களின் மூதாதையர்களிற்கு சொந்தமானதுமான, வல்வெட்டித்துறை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 15 ஆம் நாளான இன்று அழித்தல் திருவிழாவான தேர்த் திருவிழா விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இன்று காலை சுமார் 0845 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து 5 தேர்களில் சுவாமிகள் வீதி உலா நண்பகல் அளவில் இடம்பெற்றிருந்தது. தேர் வடத்தினை பெண்கள் சிறுவர்கள் உட்பட்ட பலரும் இழுத்திருந்தனர்.
வல்வை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இத் தேர் திருவிழாவிற்காக வந்திருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
karan (srilanka)
Posted Date: March 16, 2014 at 13:47
super
s.vaiguntharasa (srilanka)
Posted Date: March 16, 2014 at 00:55
thank you
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.