அளக்கடவை காளி கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 23/01/2014 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை மதவடிப் பகுதியில் அளக்கடவை வீதியில் அமைந்துள்ள காளி அம்மன் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை சுமார் 07.30 மணியளவில் ஆரம்பித்திருந்த கும்பாபிஷேக பூஜைகள் பிற்பகல் சுமார் 01.30 மணிவரை நடைபெற்றிருந்தது.
பிரதிஷ்டா பிரதமகுருவாக சிவஸ்ரீ .சோமஸ்கந்த தண்டபாணிகதேசிகர் அவர்களும், முகூர்த்த நிர்ணய குருவாக பிரம்மஸ்ரீ பரமேஸ்வர மனோகராக்குருக்கள் அவர்களும், சர்வசாதகாசிரியராக சிவஸ்ரீ ந.கேதீஸ்வரக் குருக்கள் அவர்களும் , ஏனைய குருக்களாக சிவஸ்ரீ .மு .தயாபரக்குருக்களும், சிவஸ்ரீ ச .பிரசாந் குருக்களும், சிவத்திரு சி.கபிலன் குருக்களும்ஆகியோர் கலந்து கொண்டு கும்பாபிஷேக அபிஷேகம் மற்றும் பூஜைகளை சிறப்பாக நடாத்தியிருந்தார்கள்.
கடந்த ஒரு வருடமாக இக்கோவிலில் நடைபெற்றுவந்த புணருத்தாரண வேலைகள் அண்மையில் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து நேற்று எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு காலை 10.00 தொடக்கம் பிற்பகல் சுமார் 04.00 மணிவரை நடைபெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
BABU (UNITED KINGDOM)
Posted Date: January 29, 2014 at 03:55
NICE
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.