வடமாகாண வல்லவன் உதைபந்து - பலாலி விண்மீன் வெற்றி, இன்றைய போட்டிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/05/2016 (சனிக்கிழமை)
நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம் நடாத்திவரும் "வடமாகாண வல்லவன்" தொடரின் முதலாம் சுற்றில் நேற்று முன்தினம் 12.05.2016 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் பலாலி விண்மீன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கரவை சுடர் விளையாட்டுக் கழகம் மோதியது.
விறுவிறுப்பான முதற்பாதி ஆட்டத்தில் 20 ஆவது நிமிடத்தில் விண்மீன் வீரர் காண்டீபன் முதலாவது கோலினை அடித்தார். அதனை தொடர்ந்து இரண்டாவது பாதி ஆட்டத்திலும் விளையாட்டினை சுறுசுறுப்பாக்கிய விண்மீன் அணியின் காண்டீபன் மற்றும் கெனடி ஆகியோர் 40, 53 ஆவது நிமிடங்களில் முறையே கோலினை பதிவு செய்தனர்.
ஆட்ட நேர முடிவில் 3:0 என்ற கோல் கணக்கில் பலாலி விண்மீன் வி.க வெற்றி பெற்றது. போட்டியின் ஆட்ட நாயகனாக விண்மீன் கெனடி தெரிவு செய்யப்பட்டதுடன் அவரிற்கான பண பரிசு மற்றும் பதக்கத்தினை ஓய்வுநிலை பிரதி கல்விப் பணிப்பாளர் திரு.சி.சிவப்பிரகாசம் அவர்கள் வழங்கி வைத்தார்.
இதேவேளை இன்று (14) இடம்பெறவுள்ள போட்டிகளில் றோயல் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து நவசக்தி விளையாட்டுக் கழகமும், முல்லைத்தீவு உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து தீவகம் மெலிஞ்சிமுனை விளையாட்டுக் கழகமும் மோதவுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.