தினச்செய்தியின் அனுசரனையில் பிரம்மாண்டமான பரிசு மழையுடன் நெற்கொழு கழுகுகள் வி.க நடாத்திய வடமாகாண ரீதியிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி நேற்று இரவு இடம்பெற்றது.
இந்த இறுதி போட்டியில் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாவாந்துறை சென்மேரிஸ் கழகத்தை எதிர்த்து மன்னாா் கில்லரி விளையாட்டுக் கழகம் மோதியது.
இரண்டு அணிகளுமே சிறந்த விளையாட்டை வெளிக்காட்டின. முதலாவது பாதியாட்டத்தில் மேரிஸ் அணியின் முறைதவறால் கில்லரி அணிக்கு தண்ட உதைவழங்கப்பட்டது. அதனை ரஞ்சன் கோலாக்கினாா்.
இரண்டாவது பாதியாட்டத்த்தில் கடைசி நேர முடிவின் போது சென்மேரிஸ் கோல் ஒன்றை பெற்று போட்டியை சமபடுத்த வெற்றியை தீர்மாணிப்பதற்கு சமநிலை தவிர்ப்பு உதை வழங்கப்பட்டது.
இதில் 5:4என்ற அடிப்படையில் நாவாந்துறை சென் மேரிஸ் வெற்றி பெற்று வல்லவன் பட்டத்தினை பெற்று வடமாகாணத்தின் சிறந்த அணி என்ற முத்திரையைப் பதித்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.