நல்லூர் கந்தன் மகோற்சவம் நாளை மறுதினம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/08/2016 (சனிக்கிழமை)
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவம் நாளை மறுதினம் 08ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
நல்லைக் கந்தனின் ஆண்டுத் திருவிழா இம்முறையும் வழமை போலவே ஆடி அமாவாசையின் ஆறாம் நாள் பட்சத்தில் துர்முகி வருடம் ஆடித் திங்கள் 24 ஆம் நாள் திங்கட்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து நடைபெறும் இத்திருவிழாவில்,
பத்தாம் நாள் (17.08.2016) மஞ்சந்திருவிழாவும்,
பதினெட்டாம் நாள் (24.08.2016) கார்த்திகை உற்சவமும்,
இருபதாம் நாள் (27.08.2016) காலை சந்தானகோபாலர் உற்சவம், மாலை கைலாசவாகனம்,
இருபத்தோராம் நாள் (28.08.2016) காலை கஜவல்லிமகாவல்லி உற்சவமும் மாலை வேல்விமானத் திருவிழாவும்,
இருபத்திரண்டாம் நாள் (29.08.2016) காலையில் தண்டாயுதபாணி உற்சவமும்,
இருபத்து மூன்றாம் நாள் (30.08.2016) சப்பற உற்சவமும்,
இருபத்தி நான்காம் நாள் (31.08.2016) இரதோற்சவமும்,
இருபத்தைந்தாம் நாள் (01.09.2016) தீர்த்த உற்சவமும்,
மறுநாள் (02.09.2016) பூங்காவனத் திருவிழாவும்,
இறுதியாக (03.09.2016) வைரவர் உற்சவத்துடன் நிறைவெய்தவுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.