பிரபல மாண்டலின் இசைக்கலைஞர் சீனிவாஸ் நேற்று உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். இவருக்கு வயது 45.
1969 ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்த திரு. ஸ்ரீனிவாஸ் தனது 6 ஆவது வயதில் மாண்டலினை கையில் எடுத்தார். தொடர்ந்து இசைத்துறையில் பாரிய பங்காற்றி 1988 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.
ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியா, தென்மேற்கு ஆசியா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் தனது இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
இவரின் இறுதிச் சடங்கு இன்று சென்னையில் நடைபெறவுள்ளதாக தமிழக செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.