தாழமுக்கம் நாளை காலை பாம்பனுக்கும் நாகபட்டினத்திற்கும் இடையில் கடக்கவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2016 (திங்கட்கிழமை)
கடந்த 12 ஆம் திகதி வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்கு தென் கிழக்காக உருவாகி மேற்கு வட மேற்குத் திசை நோக்கி இலங்கையின் கிழக்கு கரையை அண்மித்த தாழமுக்கம் தற்பொழுது வட மேற்குத் திசையில், இலங்கையில் கிழக்கு கரைக்கு அண்மையாக நகர்ந்து வருகின்றது.
குறித்த இந்த தாழமுக்கம் (Low pressure) மேலும் வலுவடைந்து 'தீவிர தாழமுக்கமாக' (Deep Depression) தொடர்ந்து வட மேற்குத் திசையில் நகரவுள்ள தாழமுக்கம் நாளை (17) ஆம் திகதி காலை தமிழ் நாட்டை, பாம்பனுக்கும் நாகபட்டினத்திற்கும் இடையில் கடக்கவுள்ளது என கணிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த தாழமுக்கம் யாழ் தீபகற்பத்திற்கு அண்மையாக நகரவுள்ளதால் இப்பகுதியின் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கீழேயுள்ள செய்மதிப் படத்தில் வலுவடைந்துவரும் தாழமுக்கம் காட்டப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.