தமிழக ஊடகங்களில் செய்தியான ஈழத்தமிழரின் ஜெயலலிதா அஞ்சலி நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2016 (வெள்ளிக்கிழமை)
தமிழ்நாட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு ஈழத் தமிழ் மக்கள் சார்பில் திருச்சியில் நடத்தப்பட்ட அஞ்சலி நிகழ்வு குறித்த செய்தியை தமிழக ஊடகங்கள் பிரசுரித்துள்ளன.
தமிழ்நாட்டு முதல்வரான ஜெயலலிதா அவர்களது மறைவிற்கு ஈழத்தமிழர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டமையை முக்கிய விடயமாக தமிழக ஊடகங்கள் பதிவு செய்துவருகின்றன.
தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் அகதி முகாம்களில் உள்ள மக்கள் ஜெயலலிதா அவர்களது படத்தினை வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றமையும் தமிழக ஊடகங்களால் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.
இன்னிலையில் திருச்சி கே.கே.நகர் வாழ் ஈழத்தமிழர்கள் ஜெயலலிதா அவர்களது படம் பொறித்த பதாகை வைத்து வாழை மரங்கள் கட்டியும் தோரணங்கள் கட்டியும் பொதுச்சுடர் ஏற்றியும் உணர்வெழுச்சியுடன் நடத்திய அஞ்சலி நிகழ்வு தமிழக ஊடகங்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
தொலைக்காட்சிகளில்
தினத்தந்தி குழுமத்தின் தந்தி தொலைக் காட்சி நேற்று மதியம் (07/12/16) 2 மணியளவில் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் திருச்சியில் ஈழத்தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அஞ்சலி நிகழ்வு குறித்து விரிவாக கூறப்பட்டதுடன் அவ்விடத்தில் இருந்து நிகழ்வினை நேரலையாக வழங்கப்பட்டிருந்தது.
அதே போன்று NEWS 18 தொலைக்காட்சியிலும் அஞ்சலி நிகழ்வு குறித்து நிகழ்விடத்தில் இருந்து செய்தி வழங்கப்பட்டிருந்தது.
பத்திரிகைகளில்
'த இந்து', Indian Express ஆங்கில நாளிதழிலும், தினத்தந்தி உட்பட்ட சில தமிழ் நாளிதழ்களிலும் இவை குறித்து செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
ஈழத்தமிழர்கள் தமக்கே உரிய தனித்துவத்துடன் நிகழ்வை ஒழுங்கமைத்து நடத்தியிருந்தமையால் தமிழக ஊடகப்பரப்பில் தவிர்க்க முடியாதவாறு பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.