தமிழகத்தின் மிகச்சிறந்த பட்டிமன்ற பேச்சாளர்கள் கலந்துகொள்ளும் கம்பன்விழா 2017, எதிர்வரும் 9, 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் கொழும்பில் வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இதற்கான அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கம்பன்கழகத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இவ்வாண்டுடன் 37 வருடங்கள் பூர்த்தியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டு விழா நிகழ்ச்சிகளிற் கலந்துகொள்ளத் தமிழ்நாட்டின் தலைசிறந்த அறிஞர்களான பேராசிரியர் சாலமன் பாப்பையா, புலவர் தா.கு. சுப்ரமணியம், பேராசிரியர் வி. அசோக்குமாரன், பட்டிமண்டபம் எஸ். ராஜா, திருமதி பாரதி பாஸ்கர், டாக்டர் ரி. ரெங்கராஜா, மலேசிய நாட்டு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறைப் பிரதியமைச்சர் மாண்புமிகு டத்தோ எம். சரவணன் , புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய அம்மாநில சட்டசபை சபாநாயகருமாகிய கௌரவ வெ. வைத்திலிங்கம் , புதுச்சேரி சட்டசபையின் துணைச் சபாநாயகர் வி.பி.சிவக்கொழுந்து அவுஸ்திரேலியக் கம்பன்கழக அமைப்பாளர் திரு. ஜெ.ஜெயராம் ஆகியோர் வருகை தருகிறார்கள்.
இவர்களோடு சென்னைக் கம்பன்கழகம், புதுவைக் கம்பன்கழகம், வேலூர்க் கம்பன் கழகம், இராமேஸ்வரம் கம்பன் கழகம், திருச்சிக் கம்பன் கழகம் ஆகியவற்றின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.