Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுயுடன் 42 ஆண்டுகள்

பிரசுரிக்கபட்ட திகதி: 31/05/2023 (புதன்கிழமை)
யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டு  இன்றுடன் 42 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. 
 
எரிக்கப்பட்ட கதையினை சொல்லும் ஒரு ஆவண நூல்!
 
கமலம் பதிப்பகம் வெளியீட்டில் நீலவண்ணன் அவர்களின் "மீண்டும் யாழ்ப்பாணம் எரிகின்றது"
 
01.07.1981 இல் வெளியிடப்பட்டது. நூலகம் எரிக்கப்பட்டு ஒரு மாதத்தில் வெளியாகியது. 
 
குறித்த இந்த பெறுமதியான ஆவண நூலினை கீழ்வரும் இணைப்பில் இருந்து தரவிறக்கம் செய்ய முடியும் 
 
 
 
யாழ் நூலாக எரிப்பு சம்பந்தமாக விக்கிபீடியாவில் உள்ள தகவல் பின்வருமாறு 

பின்னணி 

 
யாழ் நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு, மிக விரைவில் உள்ளூர் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு முழு நூலகமானது. யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன[7][8]. நூலகத்தின் முதலாவது கட்டடம் 1959 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது
 

வன்முறைகளும் எரிப்பும்

ஞாயிறு மே 31, 1981[தொகு]

இலங்கையின் முதலாவது மாவட்ட சபைத் தேர்தல்கள் 1981 சூன் 4 அன்று நடத்த ஏற்பாடாகியிருந்தது.[9] தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 400 இற்கும் அதிகமான காவல்துறையினர் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.[1] மே 26 அன்று வடபிராந்திய பிரதிக் காவல்துறை மாஅதிபர் பி. மகேந்திரன் கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக பி. டி. குணவர்தனா என்பவர் அடுத்த மூன்று வாரங்களுக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்.[10]

1981 மே 31 ஞாயிற்றுக்கிழமை தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) கட்சியினர் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் மாவட்ட சபைக்கான தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றை நடத்தினர்.[9][11] இதன்போது அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு இலக்காகினர். துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியவர்கள் யார் எனக் கண்டுபிடிக்கப்படவில்லை.[11] புஞ்சிபண்டா, கனகசுந்தரம் ஆகிய இரு காவல்துறையினர் உயிரிழந்தனர்.[11] இவர்களில் கனகசுந்தரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.[9]

இந்த நிகழ்வை அடுத்து, நாச்சிமார் கோவிலடிக்கு காவல்துறையினரும், துணை இராணுவக் குழுக்களும் சீருடை அணிந்தவர்களாகவும், சீருடை அணியாதவர்களுமாக அங்கு விரைந்து அடாவடித்தனங்களில் ஈடுபட்டனர்.[11] அருகில் இருந்த மூன்று வீடுகள், இயந்திர ஈருளிகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன.[11] பொதுமக்களும் தாக்கப்பட்டனர். தவிகூ கட்சி அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது.[11]

அன்றிரவே (மே 31) நாழ் நகரின் பிரபலமான பல வணிக நிறுவனங்கள், யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் வெ. யோகேசுவரனின் இல்லம், பழைய சந்தைக் கட்டடம், மருந்துக் கடைகள் தீயிடப்பட்டன.[9][11]

யாழ்ப்பாண நகரில் இருந்து 5 மைல் தொலைவில் உள்ள சுன்னாகம் சந்தையிலும் தாக்குதல் நடத்தப்பட்டு சந்தை சேதமாக்கப்பட்டது.[9] சுன்னாகம் சந்தியில் இருந்த யாழ் கூட்டுறவுச் சங்கக் கட்டடம், 'கூல் பார்' என்ற கடை[9] உட்பட ஏழு கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன.[11] நெல்லியடி சந்தையும் தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டது.[9] 15 மைல் தொலைவில் உள்ள காங்கேசன்துறையில் மூன்று கடைகள் தரைமட்டமாக்கப்பட்டன.[9] மொத்தம் ஏழு பொதுமக்கள் ஒரு வாரத் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.[9][11]

அதிகாலை 1 மணியளவில் வன்முறைகள் அடங்கியிருந்தன. அப்போது யாழ்ப்பாண அரசாங்க அதிபராக இருந்த யோகேந்திரா துரைசுவாமி இராணுவத்தினருடனும், அரசுத் தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனாவுடனும் தொடர்பு கொண்டு நிலைமைகளை எடுத்துச் சொன்னார். அவர் இராணுவ பிரிகேடியர் வீரதுங்கவை உடனடியாக யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தார்.[1]

திங்கள் சூன் 1, 1981[தொகு]

சூன் 1 திங்கட்கிழமை காலை யாழ்ப்பாண நகரில் இராணுவத்தினர் காவலில் இருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கா. பொ. இரத்தினம்மு. சிவசிதம்பரம் ஆகியோர் காலையில் அழிவுகளை வந்து பார்வையிட்டனர்.[1] கொழும்பில் இருந்து காவல்துறைத் தலைவர் அனா செனிவிரத்தினா, அமைச்சர்கள் காமினி திசாநாயக்கா, பெஸ்டஸ் பெரேரா ஆகியோர் உட்படப் பல அதிகாரிகள் யாழ்நகர் வந்தனர்.[1] அன்று முழுவதும் யாழ்ப்பாணத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

திங்கட்கிழமை இரவு 09:20 மணியளவில் யாழ் நகரில் இருந்த ஈழநாடு தினசரி அலுவலகமும், அதற்கருகில் இருந்த கடைகள் பலவும் தீக்கிரையாக்கப்பட்டன.[9][11] கொழும்பிற்கு வெளியே இருந்து வெளியிடப்பட்ட ஒரேயொரு தினசரிப் பத்திரிகை ஈழநாடு ஆகும். பத்திரிகை முகாமையாளர் ப. சிவானந்தன், உதவியாளர் சச்சிதானந்தன் ஆகியோர் எரிகாயங்களுக்குள்ளாயினர்.[1]

அன்றிரவு 10 மணியளவில் யாழ்ப்பாணப் பொது நூலகத்தினுள் நுழைந்த தென்னிலங்கை வன்முறைக் கும்பல் ஒன்று அங்கிருந்த காவலாளியைத் துரத்திவிட்டு நூலகத்தை சேதப்படுத்தி கட்டடத்திற்குத் தீயிட்டனர்.[1] யாழ் காவல் நிலையம் நூலகத்திற்கு 700 யார் தொலைவில் அமைந்திருந்தது. நூலகத்தில் இருந்த அனைத்து நூல்கள், கையெழுத்துப் பிரதிகள், பத்திரிகைகள் அனைத்தும் தீக்கிரையாகின. தளபாடங்கள் எரிக்கப்பட்டன.[9][3][11]

நூலகம் எரிவதாக அன்றிரவு 10:15 மணிக்கு தகவல் அறிந்த அன்றைய மாநகர ஆணையாளர் சி. வி. கே. சிவஞானம் மாநகர தீயணைப்பு ஊழியர்களுக்குத் தகவல் தெரிவித்தார்.[1] தீயை அணைக்கச் சென்றவர்களை துரையப்பா விளையாட்டரங்கில் தங்கியிருந்த காவல்துறையினர் தடுத்துத் திருப்பி அனுப்பினர்.[1]

செவ்வாய் சூன் 2, 1981[தொகு]

சூன் 2 இல் இலங்கை அரசு அவசரகால நிலையை அறிவித்து, யாழ் நகரில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. மாவட்ட சபைத் தேர்தல்கள் திட்டமிட்டபடி சூன் 4 இல் அவசரகால நிலைமையின் கீழ் இடம்பெற்றது. சூன் 10 அன்று அவசரகால நிலை விலக்கிக் கொள்ளப்பட்டது.[9][11]

சீருடைகளில் வந்தோரால் இந்தத் தாக்குதல்கள் நிகழ்ந்த வேளையில்,[12] இரண்டு அமைச்சர்கள், மாவட்ட அமைச்சர், அரச உயர் அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்ததாக நான்சி மறே என்ற ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.[13] 20 ஆண்டுகளுக்குப் பின்னர், அரசுக்குச் சொந்தமான "டெய்லி நியூசு" பத்திரிகை 1981 நிகழ்வை "அன்றைய அரசினால் விடுவிக்கப்பட்ட குண்டர்களால்" இவை நடத்தப்பட்டதாக தனது ஆசிரியத் தலையங்கத்தில் தெரிவித்தது.[14]

அரசியல் தலைவர்களின் எதிர்வினைகள்[தொகு]

தாக்குதல் நாளன்று இரண்டு அமைச்சர்கள் யாழ்ப்பாணம் வாடி வீட்டில் இருந்து நூலகம் எரிவதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கூறியது:

தேசியப் பத்திரிகைகள் இந்நிகழ்வு குறித்து செய்திகள் வெளியிடவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவரின் கருத்து:

யாழ்ப்பாண நகரத்தில் ஏற்பட்ட அனைத்து அழிவுகளிலும், யாழ்ப்பாண பொது நூலகத்தின் அழிவுதான் யாழ்ப்பாண மக்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.[16][17] இருபது ஆண்டுகளுக்குப் பிறகும், யாழ்ப்பாண நகர முதல்வர் நடராஜா ரவிராஜ் ஒரு பல்கலைக்கழக மாணவராகக் கண்ட தீப்பிழம்புகளை நினைவு கூர்ந்ததில் இப்போதும் வருத்தப்பட்டார்.[3]

அரசுத்தலைவர் ரணசிங்க பிரேமதாசா[தொகு]

1991 இல் அப்போதைய அரசுத்தலைவர் ரணசிங்க பிரேமதாசா பகிரங்கமாகக் குறிப்பிட்டுக் கூறியது:

இவர் லலித் அத்துலத்முதலிகாமினி திசாநாயக்கா ஆகிய அவரது கட்சி உறுப்பினர்களையே குறிப்பிட்டார். இவர்கள் பிரேமதாசவிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தவர்கள்.[15]

அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச[தொகு]

2006 ஆம் ஆன்டில் அன்றைய அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச கூறியது:

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க[தொகு]

2016 இல், அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற முறையில், நூலக எரிப்புக்கு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.[19]

பீட்டர் கெனமன்[தொகு]

நூலகம் எரிக்கப்பட்டதன் பின்னர் 1981 சூன் 5 ஆம் நாள் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி அதன் தலைவர் பீட்டர் கெனமன் தலைமையில் யாழ்ப்பாணம் சென்று அழிவுகளைப் பார்வையிட்டு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது:

அரச விசாரணை[தொகு]

அன்றைய ஐதேக அரசாங்கம் 1981 மே-யூன் வன்முறைகளுக்குக் காரணமானவர்களைக் கண்டறிவதற்கான சுயாதீன விசாரணை ஒன்றை நடத்தவில்லை என அமெரிக்காவின் விழிப்புணர்வுக் குழுவின் தலைவரும், பன்னாட்டு மன்னிப்பு அவையின் 1981 இலங்கைக்கான உண்மை அறியும் ஆணைக்குழுவின் தலைவருமான ஓர்வில் எச். ஷெல்[20][15] இக்குற்றங்களுக்கு எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.

நூலக மீள்கட்டுமானம்[தொகு]

 

மீளக் கட்ட்டப்பட்ட யாழ் நூலகம்

நூலகம் எரிக்கப்பட்டு ஓராண்டிற்குப் பின்னர், 1982 இல், யாழ் நூலக வாரம் ஒன்றை யாழ்ப்பாண சமூகம் முன்னெடுத்தது. இதன் மூலம் பொது மக்களிடம் இருந்து ஏராளமான நூல்கள் சேகரிக்கப்பட்டன. கட்டடத்தைப் புனரமைக்கும் வேலைகள் ஆரம்பமாயின. அதே வேளையில் தமிழருக்கு எதிரான 1983 கறுப்பு யூலை வன்முறைகள் தென்னிலங்கையில் ஆரம்பித்தது. 1984 இல் நூலகக் கட்டடம் மீளப் புனரமைக்கப்பட்டது. ஆனாலும், தொடந்த ஈழப்போரினால், கட்டடம் எறிகணைகளாலும், துப்பாக்கிச் சூடுகளாலும் சேதமடைய ஆரம்பித்தது. இராணுவம் யாழ்ப்பாணக் கோட்டையில் நிலை கொண்டிருந்தனர். இதனால் நூலகம் நிரந்தரமாக மூடப்பட்டது.[3][21][21]

1998 இல், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசு நூலகத்தை மீளக் கட்டியெழுப்ப முடிவெடுத்து, இலங்கை முழுவதிலும் இருந்தும்,[8][22] வெளிநாட்டு அரசுகளிடம் இருந்து இதற்கான பங்களிப்பை செலுத்துமாறு வேண்டினார்.[23] ஏறத்தாழ US$1 மில்லியன் இதற்காக செலவழிக்கப்பட்டு, 25,000 நூல்கள் வரை சேகரிக்கப்பட்டன.[24][25] இறுதியாக 2004 ஆம் ஆண்டில் நூலகம் பொது மக்களுக்கு மீளத் திறக்கப்பட்டது.[26]

 

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
ஊரணி மயானம் சுத்திகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
கடற்கரை சுத்திகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி
பிரசுரிக்கபட்ட திகதி: 18/05/2024 (சனிக்கிழமை)
15 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/05/2024 (சனிக்கிழமை)
கடலுக்குள் நடத்தப்பட்ட கையிறிழுத்தல் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 17/05/2024 (வெள்ளிக்கிழமை)
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு முதல்தடவையாக வீர வணக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2024 (வியாழக்கிழமை)
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2024 (வியாழக்கிழமை)
ஆழமான கருத்தைக்கூறும் கார்ட்டூன்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2024 (வியாழக்கிழமை)
முள்ளிவாய்க்கால் நினைவுகளைச் சுமந்து
பிரசுரிக்கபட்ட திகதி: 15/05/2024 (புதன்கிழமை)
மயிலியதனை இந்து மயானத்தில் சிரமதானம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/05/2024 (திங்கட்கிழமை)
முள்ளிவாய்க்கால் 15 வது ஆண்டு நினைவேந்தல் வாரம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA மாசி மாத கணக்கறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - பத்மாவதி சுப்ரமணியம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2024 (சனிக்கிழமை)
இலவச மரக்கன்றுகள் வழங்கல்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2024 (சனிக்கிழமை)
தெய்வேந்திரா ஐயர் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2024 (சனிக்கிழமை)
வல்வெட்டி வேவில் ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி மஹோற்சவ விஞ்ஞாபனம் - 2024
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2024 (சனிக்கிழமை)
பேராசிரியர் சிவத்தம்பியின் 92 ஆவது பிறந்த தினம் இன்றாகும்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2024 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல் - மேர்ஷி நிரோசினி சுரேஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2024 (வெள்ளிக்கிழமை)
தங்கனின் தாயார் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/05/2024 (வியாழக்கிழமை)
புவியியலாளருக்கு உதவும் உராங்குட்டான்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/05/2024 (வியாழக்கிழமை)
கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/05/2024 (புதன்கிழமை)
Green layer இன் மரம் வளர்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2024 (செவ்வாய்க்கிழமை)
குறுத்திரைப்படம் - சம்மட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2024 (செவ்வாய்க்கிழமை)
தனக்கு சுயமருத்துவம் செய்த குரங்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2024 (செவ்வாய்க்கிழமை)
உடுப்பிட்டி மதுபானசாலை விவகாரம் - நீதிமன்றத்தை நாடிய சமூக அமைப்புக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2024 (திங்கட்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8
9
10
11
1213
14
15161718
192021
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai