தேசிய ரீதியிலான கபடிப்போட்டியின் இறுதிப்போட்டிகள் இன்று வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரையில் இடம்பெற்றது. ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் ஊவா மாகாணத்தை எதிர்த்து கிழக்கு மாகாணம் மோதியது. இந்த ஆட்டத்தில் கிழக்கு மாகாணம் வெற்றிபெற்றது.
பெண்களுக்கான போட்டியில் வடமத்தி மாகாணத்தை எதிர்த்து மேல் மாகாணம் மோதியது. இந்த ஆட்டத்தில் மேல் மாகாணம் வெற்றிபெற்றது.
காலிறுதி மற்றும் அரைறுதியாட்டங்கள் கடந்த 30.09.2016 அன்று நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இன்று இறுதியாட்டங்கள் வல்வையில் நடைபெற்றது.
வெளி மாகாணங்கள் பங்குபற்றிய இந்தப் போட்டிகளைப் பார்வையிட ஏராளமான பார்வையாளர்கள் வருகை தந்ததுடன், குறித்த பகுதியில் பல வாகனங்களையும் காணக்கூடியதாக இருந்தது.
சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை முன்னிறுத்தி 42வது தேசிய விளையாட்டு விழா கடந்த 29,30, 01 மற்றும் 2ம் திகதிகளில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதன் ஓர் அங்கமாகவே கடற்கரை கபடி போட்டி இன்று வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை மைதானத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.