2018ம் ஆண்டு வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் - விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நாளை வரை நீடிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/03/2018 (திங்கட்கிழமை)
2018ம் ஆண்டு வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு அமைவாக, விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால எல்லை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டில், கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு, அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் பட்டதாரிக் கற்கை நெறியைத் தொடர்வதற்காக இந்த வட்டியற்ற மாணவர் கடனுதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் 8 இலட்சம் ரூபாவை அரசாங்க வங்கிகள் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். இந்தக் கடன் தொகைக்கான தவணைக் கட்டணம் 5 வருடங்களின் பின்னர் அறிவிடப்படும். பட்டதாரிக் கற்கை நெறிகளைப் பூர்;த்தி செய்து தொழிலில் ஈடுபடும் மாணவர்களுக்கு இந்தக் கடனைச் செலுத்த முடியும். 5 ஆயிரம் மாணவர்களை இந்தக் கடன் திட்டத்தின் கீழ் உள்வாங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அரச பல்கலைக்கழகம் அல்லது வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில், கற்கை நெறிகளைத் தொடர்வதற்குத் தகுதி பெற்றுள்ள மாணவர்கள், இதற்காக விண்ணப்பிக்க முடியாது என்றும் உயர்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி ஜயந்தி விஜேதுங்க குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக விபரங்களை கீழ் உள்ள இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.