வினாடி வினா, பேச்சு கட்டுரைப் போட்டி, சிதம்பரக் கல்லூரியிலிருந்து இருவர் தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 23/07/2014 (புதன்கிழமை)
வடமராட்சி வலயப் பாடசாலைகளிற்கிடையில் கடந்த 13 ஆம் திகதி வணிகமும் கணக்கீடு பாடத்தில் வினாடி வினா, பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டி என்பன நடைபெற்றிருந்தன.
தரம் 10 மாணவர்கள் கீழ் பிரிவு, தரம் 11 மாணவர்கள் மத்திய பிரிவு, தரம் 12 மற்றும் 13 மாணவர்கள் மேற்பிரிவு என்ற அடிப்படையில் போட்டிகள் பருத்தித்துறை மெதடிஸ் உயர்தர பெண்கள் பாடசாலையில் நடைபெற்றன.
முதலில் பாடசாலைகளுக்கு இடையிலான கோட்ட மட்ட போட்டிகள் நடைபெற்றன. அதன் பின்னர் அன்றைய தினமே இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப்பெற்ற மாணவர்களுக்கு வடமராட்சி வலய பாடசாலைகளுக்கிடையிலான குறித்த போட்டிகள் நடைபெற்று வெற்றி பெற்ற முதல் 3 மானவர்களின் பெயர் விபரமும் அறிவிக்கப்பட்டிருந்தன
இதற்கமைய வினாடி வினா போட்டியில் தரம் 12 இல் வல்வை சிதம்பரக் கல்லூரியைச் சேர்ந்த ஜெயக்குமார் முதல் இடத்தையும், கட்டுரைப் போட்டியில் தரம் 10 இல் த.ஜெயகாந்த் 3 ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
மேலும் இப்போட்டிகளில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த எஸ்.ஹேமினி (தரம் 12, பேச்சு போட்டி), எஸ்.சுபாசினி (தரம் 12, கட்டுரைப் போட்டி) மற்றும் தொண்டைமானாறு வீரகத்திபிள்ளை மகாவித்யாலயத்தைச் சேர்ந்த வி.ராஜ்குமார் தரம் 11, கட்டுரைப் போட்டியிலும் தெரிவாக்கியுள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.