கடந்த 6 ஆம் திகதி இயற்கை எய்திய வல்வெட்டித்துறையில் மாஸ்டர் என அனைவராலும் அழைக்கப்பட்ட வல்வையின் பிரமுகர் திரு.வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்களின் இறுதிக் கிரியைகள் கடந்த 12 ஆம் திகதி வல்வையில் இடம்பெற்றது.
யாழில் வைக்கப்பட்டிருந்த அன்னாரின் பூதவுடல் காலை 10 மணிக்கு அன்னாரின் அம்மன் கோவிலடி இல்லைத்திற்கு கொண்டு வரப்பட்டு, இறுதிக் கிரியைகள் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமானது.
இதனைத் தொடர்ந்து பிற்பகல் 4 மணிக்கு அன்னாரின் பூதவுடல் கப்பல் வடிவில் அமைக்கப்பட்ட பேழையில் ஊரணி இந்து மயானத்திற்கு பறை வாத்தியங்கள், வெடிகள் முழங்க எடுத்து செல்லப்பட்டது. மயானத்தில் இடம்பெற்ற கிரியைகளைத் தொடர்ந்து சிதைக்கு அன்னாரின் மகன்கள் கப்டன் ஆதவன், கப்டன் ஆசுகன் ஆகியோர் தீ மூட்டினர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.