கடந்த 15 ஆம் திகதி மரணமடைந்த முன்னாள் வல்வை விளையாட்டுக்கழக தலைவரும், சகல துறை விளையாட்டு வீரரும், பட்டக் கலைஞனுமான செல்வன் சிவநாதன் நிமலனின் (குட்டி) மரண ஊர்வலம் மற்றும் இறுதிக்கிரியைகள் இன்று வல்வையில் சற்று முன்னர் இடம்பெற்றது.
சுமார் 10 மணியளவில் இறுதிக்கிரியைகள் வல்வெட்டித்துறை உலகுடையார் பிள்ளையார் கோயில் ஒழுங்கையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று, பாண்ட் வாத்திய சகிதம் பூதவுடல் ஊரணி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
வீதி வழியே சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்புடைய பட்டாசுகள் கொழுத்தப்பட்டு, பிற்பகல் 0130 மணியளவில் உடல் ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
சிறந்த விளையாட்டு வீரனுக்குரிய உடல் அமைப்பைப் பெற்றிருந்த செல்வன் நிமலன் கடந்த சில மாதங்களாக கடுமையான சுவாசம் சம்பந்தமான நோயால் பீடிக்கப்பட்டி மேலதிக சிகிச்சிக்காக இந்தியா சென்று, இந்தியாவில் மரணமாயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.