Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

வாரம் ஒரு பழங்கதை – முருகையா மடமும் கத்தோக்கடியும் – வல்வையூர் அப்பாண்ணா

பிரசுரிக்கபட்ட திகதி: 27/04/2015 (திங்கட்கிழமை)
முருகையா மடம்
 
“ஆலடியும் சிவகுருவும்” என்னும் பழங்கதையில் “முருகையா மடமும் கத்தோக்கடியும்” பற்றிய தனிக்கதை பின்னர் தரப்படும் எனக் கூறியிருந்தேன். அம்பாள் கோயிலின் வடமேற்கு மூலையில் – வீதியின் வடக்காக – வாடி ஒழுங்கைக்குக் கிழக்காக இப்போது மோர் மடம் உள்ள இடமே பழைய “முருகையா மடம்” இருந்த இடமாகும்.
முருகையா மடம் முன்னர் இருந்த இடம்
கிழக்கு மேற்காக நீண்ட மடம் இது. ஒரு விறாந்தை – ஒரு அடிவரை உயரமான திண்ணைப் பகுதி – திண்ணைப் பகுதியின் நடுவே ஒரு சிறிய அறை. மடத்தின் மேற்புற கூரைப்பகுதி அந்த நாளைய “பீலி” ஓடுகளால் வேயப்பட்டவை.
 
அளவில் சிறியதான இந்தப் பீலி ஓடுகளை மேற்புறம் குவிந்த படியும் – கீழ்ப்புறம் நிமிர்ந்த படியுமாக மாறி மாறி நெருக்கமாக அடுக்கி விட்டால் ஒரு சொட்டு மழைத் தண்ணீர் கூட கீழே சிந்தாது. உட்புறமும் குளிர்ச்சியாக இருக்கும்.
 
விறாந்தை நடுவே தெற்காக ஒரு அகன்ற வாசல், மேற்காக சிறிய வாசல் ஒன்று. விறாந்தைப் பகுதிகள் முழுவதும் மரக் கிறாதிகள் இருந்தமையால் குளு...... குளு...... என எந்த நேரமும் காற்றோட்டம் மிகுந்திருக்கும். மேற்புறத் திண்ணையில் தலைவைத்துப்படுக்க வசதியாக – தலையணை போன்ற அமைப்புக்கொண்ட திரட்டுக் காணப்பட்டது.
 
மாலை வேளைகளில் ஆலடிக்கும், கத்தோக்கடிக்கும் வரும் கிடுகு வண்டிகள் – விறகு வண்டில்கள் என வருபவர்கள் இந்த முருகையா மடத்திலேயே படுத்துறங்குவர். மறுநாள் காலை தமது வியாபாரத்தைத் தொடங்குவர்.
 
மடத்தின் நடுப்பகுதியில் மேற்திண்ணையில் உள்ள ஒரு சிறிய அறையில் “வேல்” வடிவில் முருகனை வைத்து பராமரித்து வந்தார் ஒருவர். ஏறக்குறைய செல்வச்சந்நிதி முருகனின் வடிவில் முருகனும், அதைச் சுற்றிலும் சிறிய வேல்களும் கொண்டு, அறை ஒரு தெய்வீகச் சூழலில் மிளிரும். தினமும் மாலை வேளையில் ஒரு நேரப் பூசை நடைபெறும்.
கத்தோக்கடி,இத்தி மரம் நிற்கும் இடம்
மோர் மடத்தின் பின்புறமாக வடகிழக்கு மூலையில் உள்ள முற்றுப் பெறாத 3 மாடிக் கட்டடத்தையும், வாடி ஒழுங்கையின் கிழக்கான பகுதியையும் உள்ளடக்கியதான பகுதியில், பெரியதொரு தாமரைக் குளம் இருந்தது. குளத்தில் நீக்கமற மலர்ந்திருக்கும் தாமரை மலர்கள் பூசை வேளையில் வேலவனை அலங்கரிக்கும்.
 
முருகையா மடத்தின் காப்பாளர், பராபரிப்பாளர், ஐயர் எல்லாமே ஒருவர் தான். அவர்தான் மதவடியில் காளி கோவிலின் மேற்காக வசித்து வந்த செல்லச்சாமி என்பவர் ஆவார். இவர் “X” கதிர் தொழில் நுட்பவியலாளரான மோகனசுந்தரத்தின் தந்தையார் ஆவார். மெலிந்த தோற்றம், மாநிறம், தலையில் மிகச் சிறிய குடுமி, அரையில் காவி வேட்டி – இதுவே செல்லச்சாமியின் புறத் தோற்றம்.
 
முருகையா மடத்தின் விசேட அம்சமே “படிப்பு” த்தான். நமது கோவில்களில் வாசிக்கப்படும் “புராணபடண” வாசிப்பு போன்றது இது. மகாபாரதம், இராமயாணம், கந்தபுராணத்தின் முருகன் திருவிளையாடல்கள் ஆகியவை வாசிக்கப்படும். “படிப்பு” மாதக் கணக்கில் நீடிக்கும். பாரதத்தில் தருமர் பட்டாபிஷேகம், இராமாயாணத்தில் சீதா கல்யாணம், இராமர் பட்டாபிஷேகம், கந்தபுராணத்தில் தெய்வானை – வள்ளியம்மை திருமணப் படலங்கள் வருகின்ற வேளைகளில் “முருகையா மடம்” திருமண மண்டபம் போன்று அலங்காரம் பெறும்.
 
முருகையா மடத்தின் கிழக்குப் புறமாக வெளியே பெரிய பானையில் பொங்கப்படும் “சர்க்கரைப் பொங்கல்” முருகனுக்கு நிவேதிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படும். நாமும் சுவையான பொங்கலுடன் வீடு திரும்புவோம்.
 
காலம் கடந்தது.... காட்சி மாறியது....... முருகையா மடமும் காணாமல் போனது முருகன் எங்கே சென்றார் என்பது எனக்குத் தெரியவில்லை.
 
கத்தோக்கடி
 
அம்மன் கோவிலின் பின்புறமாகவுள்ள கத்தோக்க மரம் தினமும் நமது பார்வையில் உள்ளது. உண்மையில் அந்த நாளைய கத்தோக்க மரம் 1980 – 1981 ற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கடுங்காற்று வீசிய ஒரு இரவு வேளையில் வேரோடு சாய்ந்து போனது. பின்னர் நாட்டப்பட்ட கத்தோக்க மரமே இன்று நம் கண்ணில்படும் இளமையான கத்தோக்காகும்.
கத்தோக்கடி
பழைய ஆலமரம் புயலோடு போக, புதிய ஆலமரக் கன்றினை நாட்டி வளர்த்தெடுத்த தணிகாசாலம் அண்ணையே இந்த புதிய கத்தோக்க மரத்தையும் நாட்டி பாதுகாத்து வளர்த்தெடுத்தார் என்பது உண்மை. தணிகாசலம் அண்ணையின் வீடு கத்தோக்கடிக்கு மிக அருகாமையில் இருந்தமையால் அவருக்கு அந்தக் கூடுதல் அக்கறை ஏற்பட்டிருக்கலாம்.
 
கத்தோகடிக்கு அண்மித்ததாக சிவன் கோவில் வடமேற்கு மூலையில், வடக்குப் பார்த்தபடி, எசமான் கிணற்றுக்கு மேற்காக இருந்தது “பலாவடி மடம்”. பலாவடி மடத்தின் பின் புறமாக சிவன் கோயிலின் பழைய எஞ்சின் கொட்டகை இருந்தது.  எஞ்சின் கொட்டகைக்கும் பலாவடி மடத்திற்கும் இடையே மிகப் பெரிய ஒரு பலாமரம் கிளை பரப்பி உள்ளும் புறமுமாக வளர்ந்து மடத்தை மூடி வளர்ந்திருந்த காரணத்தால் இது “பலாவடி மரம்” எனப் பெயர்பெற்றது. இந்த மடமும் “பீலி” ஓடுகளாலேயே வேயப்பட்டிருந்தது.
 
உடுப்பிட்டியிலிருந்து புறப்படும் “ஒற்றைத் திருக்கல் வண்டி” பலாவடி மடத்தடியில் வந்து தரித்துநிற்கும். வெள்ளை வேஷ்டி – சால்வை நாசனலுடன் ஒரு முதியவர் வண்டியிலிருந்து இறங்குகின்றார். வண்டியின் உட்புறத்திலிருந்த சிறிய பெட்டகத்தை இறக்கி மடத்தில் வைத்துவிட்டு வண்டியைச் கத்தோக்கடிக்கு ஓட்டிச்சென்று நிறுத்துவார். மாட்டை அவிழ்த்து எசமான் கிணற்று நீர்த்தொட்டியில் தண்ணீர் காட்டி, வண்டியின் கீழ்புறத்தில் சாக்குப் படங்கினுள் தொங்கியபடியுள்ள வைக்கோலை உதறிப்போட்ட பின்  பலாவடி மடத்திற்கு வந்துசேருவார்.
அம்பாள் பின் வீதியில் உள்ள இத்தி மரம்
மடத்தில் ஒரு காலை மடக்கி, ஒரு காலை தொங்க விட்டபடி, பெட்டகத்தின் முன்பாக கிழக்கு நோக்கியபடி அமர்ந்திருந்து தன் வேலையை ஆரம்பிப்பார். இவர் யார்?
 
அந்த நாளில் உடுப்பிட்டி – வல்வெட்டித்துறை பகுதிக்குப் பொதுவான திருமண – பிறப்பு – இறப்பு பதிவுகளை மேற்கொள்ளும் பதிவாளர் “க.வீரவாகு” என்பவரே இவர் ஆவார். வரிசைக் கிரமமாக – மிகப் பவ்வியமாக காத்திருந்து பலரும் பதிவுகளை மேற்கொள்வர். பதிவு முடிந்தது.....காத்திருந்தவர்கள் நிம்மதியாக வீடு திரும்புவர்.
 
சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு பாடாசாலை மட்டத்தில் பல்வேறு தேவைகளுக்கும் பிறப்பு பத்திரம் தேவைப்படும் காலத்தில் பத்திரத்தை எடுத்துப் பார்த்தால் பல வினோதங்களைக் காணலாம். “பாலசேகரன்” எனச் சொல்லப்பட்ட பெயர் “பாலசேகரன்பிள்ளை” என “பிள்ளை” ஒன்று கூடவே சேர்ந்திருக்கும். “கலாராணி அம்மா” எனக் கூறப்பட்ட பெயரில் “அம்மா” போய் “கலாராணி” மட்டுமே மிகுதியாயிருக்கும். “வாமதேவன்” என்னும் பெயர் “வாசுதேவன்” என மாறியிருக்கும்.
 
இன்னொரு சுவையான சங்கதியைக் கூறுகின்றேன்.......... கேளுங்கள். பதிவாளர் வீரவாகு எழுதும் அத்தனை பத்திரங்களிலும் க், ந், ப், ம் போன்ற மெய் எழுத்துக்களுக்கு குற்றிடும் வழக்கம் இல்லை. நம்புவதற்கு கடினமாக உள்ளதா, சரி. உங்கள் வீட்டில் உள்ள பேரன், பேர்த்திமார்களை பேட்டி கண்டுபாருங்கள். அல்லது பழைய தோம்புகளை தூசு தட்டி எடுத்து பத்திரங்களைப் பாருங்கள். குற்றில்லாத பதிவுப் பத்திரங்கள் நம்மைப் பார்த்துச் சிரிக்கும்.
வல்வையூர் அப்பாண்ணா 
பலாவடி மடம் காலாத்தோடு கலந்து விட க.வீரவாகுவும் தன் அலுவலகத்தை மாற்றிக் கொண்டார்.
 
அம்பாள் பின் வீதியில் உள்ள (தற்போது) இத்தி மரம் நிற்கும் இடத்திக்கு மேற்காக இரண்டு கராஜ்கள் வடக்குப் பார்த்தபடி இருந்தன. மேற்காக சிவன் கோயில் குடும்பத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி அண்ணா தனது கருப்புநிற சோமசெற் காரை நிறுத்திக் கொள்வார்.
 
கிழக்காக இருந்த ஒரு அறையும் – விறாந்தையுமாக இருந்த பகுதியில் “பதிவாளர் - க.வீரவாகு எனப் பெயரிடப்பட்ட (பாதி புரிந்தும், பாதி புரியாமலும் இருந்த) அறிவித்தல் பலகை நீண்ட காலமாக இருந்து வந்தது. இதையே தனது பின்னாளைய பதிவிடமாகப் பயன்படுத்திக் கொண்டார் வீரவாகு ஐயர்.
 
பழங்கதை தொடரும்.....
 

குறிப்பு 

இதுவரை இவரின் 7 ஆக்கங்கள் எமது இணையதளத்தில் பிரசுரமாகியுள்ளன.

அவற்றினை பார்வையிட கீழ்வரும் இணைப்புக்குச் செல்லவும்

http://www.valvettithurai.org/forgotten-stories-of-valvettithurai-by-appathurai-master-7-4069.html

 

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
K.Premkumar (uk) Posted Date: May 08, 2015 at 19:08 
நீங்கள் எழுதும் ஒவ்வொரு கதையும் எம் பெருமைதனை சொல்லிச் செல்வது மிக அழகு.
வாழ்த்துக்கள்!


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
மரண அறிவித்தல் - சூசைப்பிள்ளை பெஞ்சமின் அருமைநாயகம் (பொறியியலாளர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2024 (புதன்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வேட்டைத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 16/04/2024 (செவ்வாய்க்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி கமலலோசனோ பூபாலசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - கிருஷ்ணபிள்ளை நிரஞ்சனகுமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
குரோதி வருடப்பிறப்பு புண்ணிய கால விசேட பூசைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/04/2024 (சனிக்கிழமை)
க.பொ.த உயர் தர கணித விஞ்ஞான வகுப்புகளிற்கான நிதிக்கோரிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/04/2024 (வெள்ளிக்கிழமை)
Toronto ஒன்றுகூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/04/2024 (வியாழக்கிழமை)
வல்வை கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
5ம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் முத்துக்குமாரு தங்கவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
சேவை நலன் பாராட்டுக்கள் மடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
பூரண சூரிய கிரகணம் - நாசாவின் படங்கள்.
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
விளம்பரம் - அறைகள் நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் குமாரதாஸ் சண்முகராசா (குமரன்)
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
விளம்பரம் - வீடு நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2024 (திங்கட்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் திரு வைத்தியலிங்கம் சிவகுகதாசன் (ஒய்வுநிலை அதிபர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2024 (திங்கட்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - புவனேந்திரன் மீனலோயினி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2024 (சனிக்கிழமை)
பண்ணிசை, நடனக்கான வளவாளர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2024 (சனிக்கிழமை)
அனலைதீவில் சூரிய ஒளி காற்றாலை மின்சார உற்பத்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 05/04/2024 (வெள்ளிக்கிழமை)
பெண்கள் தனியாக பயணிக்க முதலாவது நாடாக இலங்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)
முள்ளிவாய்க்கால், வல்வெட்டித்துறை போன்ற சொற்களை கூட உச்சரிக்க முடியாத நிலையில் நாம் உள்ளோம் - பேராசிரியர் ரகுராம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)
திருக்குறள் கருங்கல்லில் பதிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)
சிறுவர்களுக்கான உதைபந்தாட்டப் பயிற்சியும் கற்றல் பயிற்சியும்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் நாகசுந்தரேஸ்வரி இராமநாததாசன்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)
அ.மி.த.கலவன் பாடசாலையில் நடைபெற்ற இல்ல மெய்வல்லுநர் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 03/04/2024 (புதன்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai