ஆனந்தன் நீச்சல்தடாகம் பற்றி கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/03/2017 (புதன்கிழமை)
வல்வையில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள, ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகத்தை அமைப்பது சம்பந்தாமான கலந்துரையாடல் ஒன்று கடந்த 17 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றது.
வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடல் இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்களின் தலைமையில் இடம்பெற்றது..
கலந்துரையாடலில் அமைச்சர் மங்கள சமரவீரவுடன், மத்திய விளையாட்ட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள், அரச பொறியியல் கூட்டுத் தாபன உத்தியோகத்த்தர்களுடன் வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், வட மாகாண விளையாட்டுத் துறை பணிப்பாளர் குருபரன், பருத்தித்துறை பிரதேச செயலக செயலர் ஜெயசீலன், வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற செயலர் திரு.பிரசாத், , யாழ் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், பேராசிரியர் சபா இராஜேந்திரன் மற்றும் இலங்கை சுங்க அதிகாரிகள் உட்பட்ட பலர் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடலில், காணி கை மாற்றுதல் மற்றும் நீச்சல் தடாகம் அமைப்பது சம்பந்தமான அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆராயப்பட்டுள்ளது.
முன்னர் வல்வை தீருவில் பகுதியில் அமைக்க உத்தேசிக்கப்பட்டிருந்த ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகம், தற்பொழுது வல்வை ரேவடி பகுதியில் வரவு செலவு திட்டத்தில் 25 மில்லியன் ரூபாவில் செலவில் அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.