உயிர்வரை இனித்தாய் யாழ் ராஜா திரையரங்கில், மூன்று நாட்களும் இலவசம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/03/2017 (சனிக்கிழமை)
டென்மார்ர்க்கில் தயாரிக்கப்பட்ட உயிர்வரை இனித்தாய் தமிழ் திரைப்படம் எதிர்வரும் 18, 19 மற்றும்20 ஆகிய மூன்று தினங்களும் யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் காண்பிக்கப்பட இருக்கிறது.
இது வல்வை கலைஞர்களின் திரைப்படம் ரியூப் தமிழ் தயாரிப்பில் கி.செல்லத்துரை இயக்கத்தில் வஸந்த் - நர்வினி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பெண் விமானி அர்ச்சனா செல்லத்துரை இப்படத்தில் முக்கிய பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
காலை 10.30, 2.30, 6.30 ஆகிய மூன்று காட்சிகள் தினசரி காண்பிக்கப்படுகின்றன, காட்சிகள் மூன்று தினங்கள் - மூன்று தினங்களுமே இலவசம். வல்வையில் இருந்து 18.03.2017 சனிக்கிழமை காலை இலவச பேருந்து புறப்படும், என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விளம்பரப் போஸ்டல்களை யாழ். குடாநாடு முழுவதும் ஒட்டும் பணிகள் நேற்றும் இன்றும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
உயிர்வரை இனித்தாய் திரைப்படம் பதினொரு விருதுகளை வென்ற திரைப்படமாகும்..
இந்தியா உட்பட உலகின் பல நாடு;களில் காண்பிக்கப்பட்டு இப்போது இலங்கையில் திரையிடப்படுகிறது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.