வல்வெட்டித்துறை கடற்கரை பிரதேசம் விற்கப்படுவதாக முதலமைச்சரிடம் முறைப்பாடு
பிரசுரிக்கபட்ட திகதி: 14/05/2016 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை கடற்கரையை அண்டிய மீன்பிடி நடவடிக்கை இடம்பெறும் இடங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேவ்ஸ்வரனிடம் முறையிடப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பொலிகண்டி கிழக்கு கடற்தொழிலாளர்கள் பரம்பரையாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பொலிகண்டிச் சந்தியிலிருந்து 3 ஆம் கட்டை வரையான கடற்கரைப் பகுதியை தனி நபர் ஒருவர் அப்பகுதியிலுள்ள ஆலயத்தின் காணியென உரிமை கொண்டாடி விற்பனை செய்து வருவதாக முதலமைச்சரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை வடமாகாண முதலமைச்சர் அப்பகுதி பிரதேச செயலக செயலாளர், பிரதேச சபைச் செயலாளர், ஆகியோரைக் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடித மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தநிலையில் வடமாகாண முதலமைச்சருக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில் பிரதேச செயலகம் அல்லது பிரதேச சபை செயலகம் எதுவித நடவடிக்கைகளையும் முன் எடுக்கவில்லை குறித்த பகுதி கடற் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தனிநபர் குறித்த காணியை விற்பனை செய்து வருவதுடன், அப்பகுதியை அடைப்பதற்காக கடற் தொழிலாளர்களின் படகுகளை அகற்றுமாறு அர்விக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்கண்டவாறு கடந்த வீரகேசரி பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.