அகில இலங்கை ரீதியில் பளுதூக்கலில் வெற்றிபெற்ற வீராங்கனைகளும் கெளரவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/09/2015 (வெள்ளிக்கிழமை)
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற பளுதூக்கல் போட்டியில் (All Island School Games 2015) வெற்றி பெற்ற 3 வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரி மாணவிகளும் இன்று சிதம்பரக் கல்லூரியில் கௌரவிக்கப்பட்டனர்.
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற பளுதூக்கல் போட்டியில் முறையே 3 ஆம் 4 ஆம் இடங்களைப் பெற்ற செல்வி தசாந்தினி இராமகிருஷ்ணன், செல்வி கோ.ஜோகேஸ்வரி மற்றும் செல்வி அ.சிந்து ஆகியோர் 3 மாணவிகளுமே இன்று கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 3 வீராங்கனைகளும், கல்லூரியை அண்மித்து அமைந்துள்ள சுந்தரப் பெருமாள் கோயிலில் இருந்து மாலை அணிவித்து, பாண்ட் வாத்தியம் சகிதம் அழைத்து வரப்பட்டு கல்லூரி மண்டபத்தில், பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வுகள் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி முற்பகல் 1130 மணிவரை இடம்பெற்றது.
அகில இலங்கை ரீதியில் பளுதூக்கலில் வெற்றிபெற்ற 3 வீராங்கனைகளும் இன்று சிதம்பராவில் கெளரவிக்கப்பட்டனர்http://www.valvettithurai.org/chithambara-honors-3-weight-lifters-5081.html
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.