வல்வெட்டித்துறை மக்கள் சாதனை மிக்கவர்கள் என இன்று ரேவடி கடற்கரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா மையத் திறப்பு விழாவில் உரையாற்றும் போது வட ுமாகாண முதலமைச்சர் திரு.சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.
விக்னேஸ்வரன் அவர்கள் மேலும் உரையாற்றுகையில்,
கின்னஸ் புகழ் நீச்சல் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் போன்றோரின் சாதனைகள், பத்தொன்பதாம் நூற்றாண்டில் கப்பல் ஒட்டிய தமிழர்கள், திரை கடல் ஓடி திரவியம் தேடு என்னும் முதுமொழியை மெய்ப்பித்தவர்கள், கப்பல் கட்டுவதில் வல்லமை பெற்றவர்கள், பட்டம் கட்டுத்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்களில் திறமை பெற்றவர்கள் வல்வெட்டித்துறை மக்கள் என அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து தனது உரையில் முதலமைச்சர் அவர்கள் ரேவடிப் பகுதியில் ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் விரைவில் அமையவுள்ளதையும் உறுதிப்படுத்தினார்.
வல்வை ரேவடிக் கடற்கரையில் உரையாற்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.