கனடா பிறந்த 150வது பிறந்ததின விழா 2017ம் ஆண்டை முன்னிட்டு கனடாவில் இலங்கைத்தமிழரின் வாழ்வும் வரலாறும் என்ற நூல் வெளியிடப்பட்டது.
மேற்படி நூலில் கனடாவிற்கு தமிழர் வருகை, கனடாவில் தமிழ்மொழி நிலை, தமிழ்ப்பண்பாடும் பண்பாட்டு பேணலும், தமிழ் ஊடகங்களின் இயங்குநிலை, தமிழ் அரசியற் செயற்பாடுகள், கலை இலக்கியப் பண்பாட்டு மன்றங்கள், ஊர்ச் சங்கங்கள், இங்கு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள், கோயில்கள், புதியசந்ததியி னரின் கல்வி முன்னேற்றம் பற்றியும் விரிவாக அடங்கியுள்ளது. 520 பக்கங்களைக் கொண்ட நூலில் அட்டைப்படமாக கனடா பாராளுமன்றமும், கனடா கொடியிலுள்ள மேப்பிள் இலையும் இடம்பெற்றுள்ளது.
இந்த நூலை கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வரலாறும் ஒரு வரலாற்றுப் பதிகையாக பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி தமிழ்த்துறைத் தலைவர் அண்ணாமலை கனடா வளாகம், அவர்கள் வெளியிட்டுள்ளார்.
இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக கனடாவில் இயங்கும் வல்வை ஆவணக் காப்பகத்திற்கும் சிறப்பானதொரு இடம் அளித்துள்ளார்கள் என்பதையிட்டு வல்வை ழசப வாசகர்களுக்கு மிக்க மகிழ்வுடன் அறியத்தருகிறோம். ஆவணக்காப்பகம் வெளியிட்ட நூல்கள் சிலவும் உசாத்துணை நூலாக இடம்பெற்றுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.