யாழில் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக மாணவர்களை அறிவுறுத்தும் வேலைத்திட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/01/2017 (வெள்ளிக்கிழமை)
புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவு படுத்தும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையின் முதல் அமர்வு யாழ்ப்பாணம் கல்வி வலயத்தின் முகாமைத்துவின் ஏற்பாட்டில் நேற்று யாழ் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் இடம்பெற்றது.
கோப்பாய் கோட்ட கல்வி பணிப்பாளர் நா.சிவநேசன் தலைமையில் இடம்பெற்ற இந்த செயலமர்வில் யாழ் மற்றும் கோப்பாய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து மூன்று மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் வீதம் கலந்து கொண்டனர்.
இதில் வளவாளர்களாக யாழ் பல்கலைகழக விரிவுரையாளரும் சட்டத்தரணியுமான ஜனகன் முத்துக்குமார் மற்றும் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா ஆகியேர் கலந்துகொண்டு ஏற்படுத்தப்படவுள்ள அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பில் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.