ஆதிசக்தி கல்விமன்ற புனரமைப்பு பணிகள் - கல்விமன்ற குழுவின் வேண்டுகோள்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2017 (திங்கட்கிழமை)
எமது கிராம மாணவர்களின் கல்விச்செயற்பாடுகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட ஆதிசக்தி கல்விமன்றமானது பல தடங்கல்களால் முழுவதுமாக கட்டிமுடிக்கப்படாமல் பாதியில் தடைப்பட்டது. தற்போது காலத்தின் தேவை கருதி மீண்டும் புனரமைக்கப்பட்டுவருகின்றது.
இப்புனரமைப்பு பணிகள் கிராமத்தவர்களின் நிதிப்பங்களிப்புக்கள் மற்றும் சில நலன்விரும்பிகளின் பங்களிப்புக்கள் மூலம் இடம்பெற்றுவந்தன. தற்போது நிதிப்பற்றாக்குறையால் பணிகள் மந்தகதியிலே நடைபெறுகின்றது.
தற்போது ஆதிசக்தி கல்விமன்றம் இயங்கிவரும் காணி தனியாருடையது உரிமையாளருக்கு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் ஒப்படைக்கவேண்டும் எனவே வெகுவிரைவாக எமது கட்டடத்தை முடிக்கவேண்டிய நிலையில் உள்ளோம். ஆதிகோவிலடிவாழ் புலம்பெயர் உறவுகளும் எம்முடன் கைகோர்த்து தங்களால் இயன்ற பங்களிப்புக்களை மேற்கொண்டு எமது கிராம கல்வி மன்றத்தை கட்டிமுடிப்பதற்கு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.