பிரபாகரன் அவர்களால் மாஸ்டர் என அழைக்கப்பட்ட இருவரில் ஒருவர் அமரர் அதிரூபசிங்கம் அவர்கள் ஆவார்.
கடந்த 6 ஆம் திகதி இயற்கை எய்திய, வல்வையில் சகாலராலும் அறியப்பட்ட அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்கள் 60 களில் வல்வையில் இரவுப் பாடசாலை ஒன்றை ஸ்தாபித்தது அதில் பல ஆண்டுகள் கல்வி போதித்ததில் ஒருவர் ஆவார்.
குறித்த இந்த இரவுப் பாடசாலையில் வல்வை மற்றும் இதனைச் சூழவுள்ள பகுதிகளைச் சூழ்ந்த ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வைத்தியர்கள், பொறியியலாளர்கள், உயர் அரச அதிகாரிகள் என பல்வேறு துறைகளில் வாகை சூடினர். இந்தப் பாடசாலையில் பிரபாகரன் அவர்களும் கல்வி பயின்றதாக கூறப்படுகின்றது.
இந்த வகையிலேயே அமரர் அதிரூபசிங்கம் அவர்களை மாஸ்டர் என அழைத்திருந்த பிரபாகரன் அவர்கள், பின்னைய நாட்களில் சில தடவைகளில் (இவரிடம் உட்பட) இந்த விடயத்தை சுட்டிக்காட்டிய பிராபகரன் அவர்கள் “தான் வேணுகோபால் மாஸ்டர் மற்றும் அதிரூபசிங்கம் மாஸ்டர் ஆகிய இருவரையும் மட்டுமே மாஸ்டர்” என அழைப்பதாக தெரிவித்திருந்தார் என கூறப்படுகின்றது.
87 இல் திலீபனின் உண்ணாவிரதத்தை தொடர்ந்து, யாழின் பல இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் பொது மக்களால் தொடர, வல்வையிலும் முன்னாள் வல்வை நகரசபை உறுப்பினர் திரு.கருணாநந்தராசா உட்பட்ட இருவர் வல்வெட்டித்துறை சந்தியில் அமைந்துள்ள வல்வை சனசமூக சேவா நிலையத்தில் உண்ணா விரதத்தை மேற்கொண்டனர்.
உண்ணா விரதத்தில் ஈடுபட்ட இருவரையும் மரியாதை நிமித்தம் சந்திப்பதற்காக பிரபாகரன் அவர்கள் 4 ஆம் நாள் இரவு சுமார் 9 மணியளவில் வந்திருந்தார்.
இந்தச் சந்திப்பின் போது அமரர் அதிரூபசிங்கம் அவர்களை பிரபாகரன் அவர்கள் அழைத்திருந்ததாகவும், உண்ணா விரத்ததில் ஈடுபட்டவர்களுடன் சிறிது நேரம் உரையாடிய பின்னர், பிரபாகரன் அவர்கள் அமரர் அதிரூபசிங்கம் அவர்களுடனேயே சுமார் ½ மணி நேரம் கலந்துரையாடியிருந்தார் எனக் கூறப்படுகின்றது
இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் ஒரு சில மக்களே நின்றிருந்த போதும், பிரபாகரன் அவர்கள் வந்திருந்த செய்தி கேட்டு ஏராளமானோர் இறுதி நேரத்தில் குழுமினர் எனவும் இந்த நிகழ்வில் பிரபாகரன் அவர்களுடனுன் சூசை மற்றும் (கோல்சர்) பாபு உட்பட்ட ஆயுதம் அற்ற மெய்ப் பாதுகாவலர் சிலர் வந்திருந்ததாகவும் உண்ணாவிரத்தத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் தெரிவித்திருந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.