Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

ஆதவன் பக்கம் 49 – ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகம் -எப்படி நீந்தப் போகின்றோம்!

பிரசுரிக்கபட்ட திகதி: 24/06/2019 (திங்கட்கிழமை)

குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட விடுதலைப் புலிகளின் பன்னிருவர் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டிருந்த தீருவில் திடலில், உள்நாட்டுப் போரில் உயிர்நீத்த அனைவருக்கும் என ஒரு தூபி அமைக்கவேண்டும் என ஒற்றைக் காலில் நின்றார் திரு சிவாஜிலிங்கம் அவர்கள். 

‘இது தவிர்க்கப் படவேண்டிய ஒரு முயற்சி’ என்றேன். ‘உங்கள் அக்காவின் இழப்புக்கும் கடந்த கால போர் ஒரு மறைமுக காரணம் தானே?, போரில் உயிர் இழந்தவர்களில் ஒருவராக உங்கள் அக்காவின் ஞாபகார்த்தமாகவும் குறித்த தூபி அமைவதை நீங்கள் விரும்பவில்லையா?....... எனப் போன்ற தன் பக்க வாதங்களை எனக்குக் கூறியதைப் போல்  மற்றவர்களுக்கும் கூறி வருகின்றார். ஊர்மக்கள் உட்பட்ட பலர் இதனை விரும்பவில்லை என்பதையும், இதனால் ஊர்மக்கள் மத்தியில் (குறிப்பாக புலம் பெயர் வல்வை வாசிகள்) தனது செல்வாக்கை இழந்து வருகின்றார் என்பதை அவர் அறியாதது அவரின் அறியாமையே.
 
வடக்கில் – யாழில் – வடமராட்சியில் – அதுவும் வல்வையில் - சர்வதே தரத்திலான ஒரு நீச்சல் தடாகம் சில தினங்களில் உத்தியோக பூர்வமாக திறக்கப்படவுள்ளது. வல்வை நகர்புறப் பகுதியில், சற்சதுர 4 பரப்பு வெற்றுக் காணி என்ற ஒன்றே இல்லாத நிலையில், சுமார் 20 பரப்பு நிலம் கையகப்படுத்தப்பட்டு நீச்சல் தடாகம் – அதுவும் சர்வதேச தரத்திலான நீச்சல் தடாகம் அமைகின்றது.
 
இலங்கை சுங்கத்துக்கு சொந்தமான பருத்தித்துறை, காங்கேசன்துறை மற்றும் ஊர்காவற்துறை போன்ற நிலங்கள் இன்றும் சுங்கத்துக்கு சொந்தமானவையாகவே விளங்குகின்ற நிலையில், வல்வையில் அமைந்திருந்த சுங்க நிலம் மாத்திரம் வல்வை நகரசபைக்கு சொந்தமாக கைமாற்றப்பட்டது. கிட்டத்தட்ட சாத்தியப் பட முடியாத விடயம் இது.
 
முன்னர் சுங்கக் காணி 
அதே நிலத்தில் இலங்கை அரசின் நிதியுதவியுடன் நீச்சல் தடாகம் ஒன்று சாத்தியம் ஆகின்றது. இந்த வரி...... அந்த வரி..... என நாங்கள் வாங்கும் பொருட்களில் போடப்பட்டுள்ள வரிகளின் படி பார்த்தால் நான் இதுவரை அரசுக்கு குத்து மதிப்பாக மறைமுகமாக செலுத்தியுள்ள சுமார் 1 கோடி ரூபாவின் ஒரு பகுதியாவது ஊருக்கு வந்துள்ளது என்ற சிறிய சந்தோஷம் எனக்கு. (இலங்கை அரசிடம் / அமைச்சர்களிடம் கையேந்தக் கூடாது என்பவர்களுக்கு இந்த விடயம் சமர்ப்பணம்) 
 
இவ்வாறானதொரு நீச்சல் தடாகத்தை சாத்தியம் ஆக்கியவர் என்றால் – அது சிவாஜிலிங்கம் தான். நிலம் கையகப்படுத்தல், அரசின் அனுமதி, அமைச்சர்களிடம் இருந்து நிதி. பிரதேச மக்கள் சிலரின் மறைமுக எதிர்ப்பு, மேலாக மேதாவிகள் ஒரு சிலரின் ‘புட்டிசம்’ கள் .............. என பல தடைகளை தாண்ட முன்னின்றவர் சிவாஜிலிங்கம். சிவாஜிலிங்கம் தான் ‘முழுதும்’ என்று நான் கூறவில்லை.
 
நீச்சல் தடாகத்துக்கு அடிக்கல் போட்ட போது, ‘இது மங்கள சமரவீரவினால் முன்னெடுக்கப்பட்ட ஒரு முழு முயற்சி என்று FB இல் போட்டார் ஒருவர். ‘நீங்கள் இதுவரை குழப்பியது போதும், இதையும் தயவு செய்து குழப்பிவிடாதீர்கள்’ என்று Comment அடித்திருந்தான் ஒரு இளைஞன். 
 
எனது இந்தப் பக்கத்தின் பிரதான நோக்கம் மேற்குறிப்பிட்ட விடயங்கள் அன்று, மாறாக நீச்சல் தடாகம் எதிர்கொள்ளவுள்ள பிரச்சனைகள் பற்றியது தான்.
 
பராமரிப்புக்கான தகுந்த ஊழியர்கள், பராமரிப்பு செலவு, பயன்பாடு, கடலுக்கு அண்மையில் அமைந்துள்ளமை என சில இடர்கள் வரக்கூடும், இவை இயல்பானவை மற்றும் ஏற்கக்கொள்ளக்கூடியவை.
 
இவைகளுக்கு மேலாக தலை தூக்கவுள்ள பிரச்சனை நீர்ப் பிரச்சனைதான்.   நீச்சல் தடாகதுக்கு 7 லட்சம் லீட்டர் நன்னீர் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்ப இறைப்புக்குத் தேவையான நீர் கூட, வடமராட்சி வடக்கில் இல்லை என்பது ஒரு வியக்க வைக்கும் விடயம். வடமராட்சி வடக்குக்கு சமமான நிலப்பகுதிகளைக் கொண்ட பெரிய நகர்கள் பலவற்றில் லட்சக் கணக்கான குடி  மக்களின் நீர்த் தேவையை பூர்த்தி செய்து நூற்றுக் கணக்கான நீச்சல் தடாகங்களுக்கு நீர் வசதி செய்து கொடுக்கின்றார்கள்.
 
இங்கு ஒரே ஒரு நீச்சல் தடாகத்துக்கு நீருக்கு தட்டுப்பாடு. 
 
நிலாவரை மற்றும் வடமராட்சி கிழக்கின் நீர்ப் படுக்கைகளில் இருந்து முதற் கட்டத்துக்கு நீரைப் பெற முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இது ‘இரணைமடு – யாழ்பாணம்’ மாதிரி அடுத்துக் கட்டங்களுக்கு நகராது.
 
முதற் கட்ட நீரை மேற்குறிப்பிட்ட இடங்களில் இருந்து எடுத்து, பின்னர் இருக்கும் நீரை சுத்தி கரித்துக் கொண்டு, அதற்குப் பின்னர் தேவைப்படும் நீரை ‘நன்னீர் பிறப்பாக்கி’ (Fresh Water Generator) மூலம் பூர்த்தி செய்யலாம் என்கின்றார்கள் சம்பந்தப்பட்டவர்கள். ஆகவே எதிர்வரும் காலங்களில் நன்னீர் பிறப்பாக்கியே இந்த நீச்சல் தடாகத்தின் உயிர்நாடியாக விளங்கவுள்ளது.
 
ஆவியாகும் நீர், குளித்தல், குடித்தல் எனப் போன்ற பல தேவைகளுக்கு பெருமளவு நீர் தேவைப்படவுள்ளது. இதைவிட சுத்திகரிப்பு சுதப்பும் போதோ அல்லது டெங்கு முட்டை உள்ளது என்றோ முழுமையாகக் கூட, நீர் மாற்றப் படவேண்டி வரலாம்.
 
யாழில் இதுவரை நன்னீர் பிறப்பாக்கிகள் மூலம் நன்னீர் எங்கும் பெறப்படவில்லை. இந்த முயற்சிக்கான சில முஸ்தீபுகள் முன்னர் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால் கை கூடவில்லை.
 
நன்னீர் பிறப்பாக்கி மூலம் கடல் நீரை சுத்தி கரிப்பது பல இடங்களில் – மழைத்துளி விழாத இடங்களில் - இடம்பெற்றுவரும் ஒன்று தான். கடந்த 26 வருடங்களில் நான் அதிகம் பாவித்துள்ளது இவ்வாறு பெறப்பட்ட நீர் தான் (கப்பல் வாழ்க்கையில்). 
 
ஆனாலும் இங்கு இத்தகைய முறை ஒன்றின் மூலம் கடல்நீரை மாற்றி நன்னீரை  பெறுவது என்பது எவ்வளவு சாத்தியப்படப்போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். குறித்த பிறப்பாக்கியை பயன்படுத்தக்கூடிய தொழில் நுட்பம், பராமரிப்பு, உதிரிப் பாகங்கள் பெறுவது போன்று பல சிக்கல்கள் இதில் உண்டு. .இவற்றை விட வேறு ஒரு சிக்கலும் எதிர்காலத்தில் வரக்கூடும் – அதைப்பற்றி நான் இங்கு எழுதவிரும்பவில்லை. 
 
‘தூரத்தில போற பிள்ளையிந்த முகத்தில் இருக்கும் பருவைக் கூட துல்லியமாக படம் பிடிக்கமுடியும் என்று சிங்கபூர் முஸ்தபா சென்டரில் விற்பனையாளர் ஒருவர் கூற, அவசரக்  கோளாறில் ஒரு காமராவை வாங்கி – இன்று அதற்கு ஒரு பட்டரி வாங்க யப்பானில் கூட முயற்சித்து கை விட்டுவிட்டேன்.  
 
நீர்ப் பிறப்பாக்கிக்கு எதிர்காலத்தில் உதிரிப் பாகம் எடுப்பது என்பது ஒரு இலகுவான விடயம் அல்ல. (புதுசை வாங்க வேண்டியது தான்) 
 
தற்பொழுது நீச்சல் தடாகம் 
நீர்ப் பிறப்பாக்கி விடயத்தைப் பொறுத்தவரை ஒரே ஒரு சாதகம் – வல்வையில் பல கப்பற்கார பொறியியலாளர்கள் குறித்த உபகரணத்தை கையாளக்கூடியவர்கள் என்பது தான், திருத்துவது உட்பட. 
 
நீச்சல் தடாகத்துக்கு தேவையான நீரை, தொடர்ந்து தடங்கல்கள் இன்றி பெறுவது பற்றி  சரியான ஒரு திட்டவரைபு (Assessment) தயாரிக்கப்படவில்லை.
 
மழை காலங்களில் 'வெள்ளம்' என்றும் கோடை காலங்களில் 'தண்ணீர்' என்றும் ஒவ்வொரு ஆறு மாதமும் – முன்னுக்கு நடந்ததையும் பின்னுக்கு நடக்கப் போவதையும் மறந்து – காலச் சக்கரத்தில் ஓடும் நாங்கள், நீச்சல் தடாகத்து தண்ணீர் தேவை பற்றியும் பெரிதாக அலட்டிக்கொள்ளப்போவதில்லை. ஆனாலும் நீச்சல் தடாகம் நீர்ப் பிரச்சனையால் சில காலங்களுக்காவது திண்டாடும் என்பது திண்ணம். இதுவே இப்பிரதேசத்தின் நீர்ப் பிரச்சனை பற்றி எதிர்காலத்தில் ஒரு புரிதலைக் கொடுக்கக்கூடும்.
 
‘பனை மரத்தை பற்றிக் கூறுகின்றேன் வா' என்று கூட்டிக்கொண்டு போய், ‘பனை மரத்தில் கட்டியிருந்த மாட்டைப் பற்றி கூறுகின்றான்’ என்று நீங்களே கூறாமல் – மாட்டைப் பற்றியும் ஒரு பதிவை இங்கு இடுகின்றேன்.
 
அண்மையில் தென் ஆபிரிக்காவின் கேப்டவுன் போன பொழுது, பைலட் கூறியிருந்தார் ‘வீட்டில் வளர்க்கும் மரங்களுக்கு நீர் இடுவதை நிறுத்துமாறு அரசு கட்டளை பிறப்பித்துள்ளது' என்று. 
 
யாழைப் பொறுத்தவரை வருடந்தோறும் சுமார் 1200 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியை பெறுகின்றது. மக்கள் தொகை வெறும் சில லட்சங்கள்தான். ஓரளவு பசுமை வேறு. ஆனாலும் நீர்த் தட்டுப்பாடு. யாழின் நீர்த் தட்டுப்பாடும் – இதனை இங்குள்ளவர்கள் புரியாத் தவறி வருவதும் எனக்கு இன்றும் வியப்பைக் கொடுத்து வருகின்றது.
 
இன்று அரச ஊடகத்தில் வந்த செய்தி - வடக்கில் கடும் வறட்சி – பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் விநியோகம் (https://tamil.news.lk/news/political-current-affairs/item/30281-2019-06-24-08-42-01)
 
‘தமது சொந்த மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட நல்ல திட்டம் ஒன்றை, உலகில் தடுத்தவர்கள் என்றால் அது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தான்’ என்று ஆதங்கப்பட்டிருந்தார் ஒரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர். நான் கூட இவ்வாறுதான் யோசித்து இருந்தேன். 
 
'மகாவலித் திட்டம் என்று எமது நிலத்தைப் பிடித்து விடுவார்கள்' என்றார்கள். சரி நன்னீர் திட்டத்துக்கு என்ன மாற்று வழி செய்துள்ளார்கள் அல்லது குறைந்த படசம் கூறியுள்ளார்கள். 
 
மாரி மழையால் தப்பித்து வருகின்றோம். உலக காலநிலை மாற்றத்தால் இரண்டு வருடம் வடக்கில் மழை பெய்யத் தவறினால், மகாவலி நீர் வேண்டும் என்று கூப்பாடு போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 
 
வடக்கு மகாவலித் திட்டம் போன்று கூட்டமைப்பினர் குழப்பிய இன்னொமொரு நல்ல விடயங்களில் ஒன்று சுண்டிக்குளம் சரணாலயத்தை விரிவுபடுத்த அரசு மேற்கொண்ட முயற்சியை (ரணில் இங்கு வந்தபோது  கூறி) நிறுத்தியது தான். 
 
எது எப்படி என்றாலும் இங்கு அனைவருக்குமென ஒரு நீச்சல் தடாகம் ஒன்று அமைவது ஒரு வரப்பிரசாதம் என்பதில் ஐயமில்லை. எதிர்வரும் பிரச்சனைகளை எதிர்கொண்டு இதனை ஒரு வெற்றிகாரமான திட்டமாக்க அனைவரும் பாடுபடவேண்டும்.

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
ராஜ்குமார் (Canada) Posted Date: June 26, 2019 at 22:14 
நீண்ட போரில் உண்டான நெருப்பாற்றை
நீந்திக்கடக்க கற்றுக் கொடுத்தவன்
கடற்கரை மண்ணருகில்
நீச்சலில் சாதனை செய்தவன் பெயரில்
ஓர் நீச்சல் தடாகம்.

தம்பி ஆதவன் எழுதிய சாத்தியமான எதிர்கால தடங்கல்களிலிருந்து தடாகம் தப்பிப்பிழைக்க வாழ்த்துக்கள்

Thevarajah Sivakumarasamy (Sri Lanka) Posted Date: June 25, 2019 at 10:52 
Well Said Athavan..
Happy to hear a swimming pool facility in VVT, should be allocate for another 5 years maintenance cost of the pool when they are hand over to Urban Council. I don't think there will be enough cash available or collect able to maintain this cost.
many of our politicians thinking only current year and the following year. No one think about future plan, Tourism development, Sundikulam saranalayam, Sea Water purification plan, Mahavali Water supply plan etc is an important to develop the north and improve our people vacancy and local product sales etc... There are lot to write..
.

RAJKUMAR PERIYATHAMBY (canada) Posted Date: June 25, 2019 at 06:34 
சிறந்த பதிவு .


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


 இந்த செய்தி தொடர்புபட்ட எமது முன்னைய செய்திகள்:
ஆதவன் பக்கம் (22 ) – 'பழனியப்பா' எனும் மகத்தான மனிதர்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/08/2020 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (48) – அடிக்கடி வரும் கனவு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/12/2018 (வெள்ளிக்கிழமை)
ஆதவன் பக்கம் (47) – முழுமையாகாத பக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2018 (வியாழக்கிழமை)
ஆதவன் பக்கம் (46) – வடமராட்சிகிழக்கின் பூர்வீகச் சொத்துக்களை அழிக்கும் நாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/11/2018 (ஞாயிற்றுக்கிழமை)
ஆதவன் பக்கம் (45) – கப்டன் ஒப் தி ஷிப்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/11/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (44) – ஆபத்தான வயர்களும் வாணவேடிக்கைகளும்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/11/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (43) – கவிழ்ந்த தேரும் நிமிர்த்திய திறமையும்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/11/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (42) - 'அப்பாடா' என கூறவைக்கும் செய்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 28/10/2018 (ஞாயிற்றுக்கிழமை)
ஆதவன் பக்கம் (41) - ரமணனும் சகோதரிகளும் ஒரு உதாரணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/10/2018 (ஞாயிற்றுக்கிழமை)
ஆதவன் பக்கம் (40) - மாயமான வள்ளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/10/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (39) - தண்ணீர் தண்ணீர் தண்ணீர் - யாழின் நீர்த் தட்டுப்பாடு
பிரசுரிக்கபட்ட திகதி: 06/10/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (38) - விவிரி ஜங்ஷன்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/09/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (37) - சிறந்த உற்றார்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/09/2018 (ஞாயிற்றுக்கிழமை)
ஆதவன் பக்கம் (36) - கழகங்கள் கலைக்கப்பட வேண்டும்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (35) - ஒரு குடும்பத்தின் வாழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2018 (திங்கட்கிழமை)
ஆதவன் பக்கம் (34) – அன்னதானத்துக்குப் பட்டபாடும், அன்னதானம் படும்பாடும்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/09/2018 (திங்கட்கிழமை)
ஆதவன் பக்கம் (33) – இவர்கள்தான் கெளரவிக்கப்படவேண்டும்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/08/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (32) - Hats off ஜெயா
பிரசுரிக்கபட்ட திகதி: 18/08/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (31) – வல்வையில் துறைமுகத்துக்கான சாத்தியங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/08/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (30) – யாழிலும் யூனிவேர்சல் பழங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/08/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (29) – ஊரில் பணப்புழக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/07/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (28) - அக்கௌன்டன்ட் குமாராசாமி
பிரசுரிக்கபட்ட திகதி: 21/07/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (27) – உண்மைச் சம்பவம் - ஐயாவும், ஆஞ்சநேயர் சாமியாரும்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/07/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (26) – கண்டன் ஆச்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/07/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (25) – யாழ்ப்பாணத்தாரின் ஒழுங்கைகளும் சுவர்களும்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/06/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (24) – கப்பல் வாங்கிய நம்மவர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/06/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (23 ) – யாழ்ப்பாணக் குப்பைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/06/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (21) – சுமந்திரனுக்கு வல்வையில் மாலை, 'Shame' மா?
பிரசுரிக்கபட்ட திகதி: 02/06/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (20) – கஸ்புஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (19) – மதுராவும் வல்வையும்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (18) – இந்திரவிழாவில் நான் கண்ட 17 குறைபாடுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (17) – பாணாக்கம், மோர், தயிர்ச்சோறு, சர்பத்..........
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (16) – ஒரு முதுசத்தின் மறைவு (காணொளி இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 21/04/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (15) – கப்பல் மாப்பிள்ளை
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (14 ) – வல்வை வரைபடத்தில் முதலாவதாக ரேவடிப் பூங்கா
பிரசுரிக்கபட்ட திகதி: 07/04/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (13) – நான் ஒரு மரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/03/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (12 ) – இங்கு ஆங்கிலம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/03/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (11) – கொட்டப்பட்ட இ வேஸ்ற்றுக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/03/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (10) – இசை நிகழ்ச்சியால் வல்வையில் மழுங்கடிக்கப்படும் பாரம்பரியங்களில் ஒன்று
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2018 (வெள்ளிக்கிழமை)
ஆதவன் பக்கம் (9 ) – பழைய இரும்பு பித்தளைக்கு பேரீச்சம்பழம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/03/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (8) – தடுமாறும் தமிழர் தமிழ் பெயர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/02/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (7) – வேதா ரீச்சரும் மதுரா அக்காவும்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/02/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (6) உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள், 3 வருடங்கள் முன்பு நான் விரும்பியது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/02/2018 (திங்கட்கிழமை)
ஆதவன் பக்கம் (5 ) – மயிலிட்டி என்னும் சோகம், நேரடிப்பாதை வல்வைக்கு வளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/02/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (4 ) – நகரபிதாவிற்கு………………….பொது மக்கள் சார்பில் 101 கோரிக்கைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (3) - M.K.சிவாஜிலிங்கம் - நான் அறிந்த ஊரின் சேவகன் -
பிரசுரிக்கபட்ட திகதி: 27/01/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (2) – அரிப்பும், அழிப்பும்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/01/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (1) – ஐயா
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/01/2018 (வெள்ளிக்கிழமை)

பிந்திய 25 செய்திகள்:
மரண அறிவித்தல் - சிவசுப்பிரமணியம் பங்கைற்செல்வம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/04/2024 (வியாழக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - கமலலோசனா பூபாலசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - பரமானந்தவேல் தனலெட்சுமி
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2024 (புதன்கிழமை)
தேரேறி வருகின்றாள் எங்கள் தேசமன்னன் வளவுக்காரி.
பிரசுரிக்கபட்ட திகதி: 22/04/2024 (திங்கட்கிழமை)
இன்றைய நாளில் - இலங்கையின் மிகப்பெரிய செல்வச்சந்நிதி தேர் எரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/04/2024 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல் - சூசைப்பிள்ளை பெஞ்சமின் அருமைநாயகம் (பொறியியலாளர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2024 (புதன்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வேட்டைத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 16/04/2024 (செவ்வாய்க்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி கமலலோசனோ பூபாலசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - கிருஷ்ணபிள்ளை நிரஞ்சனகுமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
குரோதி வருடப்பிறப்பு புண்ணிய கால விசேட பூசைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/04/2024 (சனிக்கிழமை)
க.பொ.த உயர் தர கணித விஞ்ஞான வகுப்புகளிற்கான நிதிக்கோரிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/04/2024 (வெள்ளிக்கிழமை)
Toronto ஒன்றுகூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/04/2024 (வியாழக்கிழமை)
வல்வை கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
5ம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் முத்துக்குமாரு தங்கவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
சேவை நலன் பாராட்டுக்கள் மடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
பூரண சூரிய கிரகணம் - நாசாவின் படங்கள்.
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
விளம்பரம் - அறைகள் நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் குமாரதாஸ் சண்முகராசா (குமரன்)
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
விளம்பரம் - வீடு நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2024 (திங்கட்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் திரு வைத்தியலிங்கம் சிவகுகதாசன் (ஒய்வுநிலை அதிபர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2024 (திங்கட்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - புவனேந்திரன் மீனலோயினி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2024 (சனிக்கிழமை)
பண்ணிசை, நடனக்கான வளவாளர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2024 (சனிக்கிழமை)
அனலைதீவில் சூரிய ஒளி காற்றாலை மின்சார உற்பத்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 05/04/2024 (வெள்ளிக்கிழமை)
பெண்கள் தனியாக பயணிக்க முதலாவது நாடாக இலங்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai