கானொளியில் காணப்படுவது வல்வெட்டித்துறையின் ஆதிகோவில் பகுதியில் அமைந்துள்ள மீன்சந்தை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் ஆகும். மீன்பிடித் தொழிலை பிரதானமாகக் கொண்டுள்ள இந்த பகுதியில் சுமார் 450 குடும்பங்கள் வரை வாழ்ந்துவருகின்றன.
ஆச்சரியப்படுத்தும் விடயம் என்னவென்றால் முன்னர் இலங்கை இராணுவ முகாம் மற்றும் விடுதலைப் புலிகளின் கடற்படை முகாம் ஆகியவை அமைந்திருந்து பல சண்டைகளைக் கண்ட ஊரிக்காட்டை ஒட்டி இந்தப் பிரதேசம் அமைந்திருந்த போதும், இந்தப் பகுதியில் உள்ள மக்கள் தமிழகத்திற்கோ அன்றி ஏனைய நாடுகளுக்கோ குறிப்பிடக்கூடிய வகையில் இடம்பெயரவில்லை என்பதுதான்.
சுனாமியாலும் அதிக அளவிலான அழிவை இப்பகுதி மக்கள் சந்தித்திருந்தனர்.
இந்தப் பிரதேசத்தில் சுமார் 300 ற்கு மேற்பட்ட படகுகள் உள்ளன என்பதும், இங்குள்ள எவரும் சர்ச்சைக்குரிய ரோலர் தொழிலில் ஈடுபடுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வல்வையில் அதிகளவான எரிபொருள் நுகர்வோராக உள்ள இவர்கள், நாள் ஒன்றுக்கு (செலவுகளுடன் கூடிய) ஒரு சில லட்சம் வரையான இலங்கை ரூபாய்களை வருவாயாகப் பெறுகின்றனர். ஆனாலும் இவர்கள் சிறந்த சந்தை வாய்ப்பைப் பெறுகின்றனரா என்பது கேள்விக்குறியே?
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.