சீனாவின் கடலில் நிலத்தை உருவாக்கும் முயற்சிக்கு எதிராக ஒன்றாக அணிதிரளும் ஆசியான் நாடுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/08/2015 (புதன்கிழமை)
தென் சீனக் கடலில் (South China Sea) சீனா உருவாக்கி வரும் சர்ச்சைக்குரிய நில உருவாக்கத்திற்கு எதிராக தென் கிழக்கு ஆசிய நாடுகள் (Southeast Asian nations) ஒன்றிணைந்துள்ளதாக தென் கிழக்கு ஆசிய நாடுகளின் ஊடகங்களில் நேற்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனாலும் சீனா தொடர்ந்து தனது நில உருவாக்கத்தை (land reclamation) சர்ச்சைக்குரிய கடற்பகுதியில் தொடரவுள்ளதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய தீவும் உரிமை கொண்டாடும் நாடுகளும்
10 நாடுகளை பிரதிநிதிப்படுத்தும் தென் கிழக்கு ஆசியா நாடுகளின் அமைப்பின் (Asean) செயலாளர் நாயகம் Le Luong Minh, நேற்று முன்தினம் நடைபெற்ற 48 ஆவது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில்48th (Asean Foreign Ministers Meeting), ஆசியானின் வெளியுறவு அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கடற்பகுதியில் சீனா தொடரும் மிகப்பெரிய நில உருவாக்கம் பற்றி தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
தென் சீனக் கடலில் Spratly Islands என்னும் ஆழமற்ற நிலப் பரப்பிலான தீவு ஒன்றினை கடந்த சில வருடங்களாக நிரப்பி பலத்த சர்ச்சைக்கு மத்தியில் ஒரு குறிப்பிடக் கூடிய நிலப் பரப்பு ஒன்றினை உருவாக்கியுள்ளது சீனா, அத்துடன் தொடர்ந்தும் விரிவாக்கத்தில் ஈடு பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த Spratly Islands என்னும் தீவு சீனாவில் இருந்து மிகத் தொலைவிலும் பிலிப்பைன்சுக்கு அண்மையாகவும் அமைந்துள்ளது. இதனால் இந்த கடற் பகுதியை சீனாவுடன், பிலிப்பைன் உட்பட்ட ஏனைய தென் கிழக்கு ஆசிய நாடுகள் உரிமை கோரி வருவதுடன் சீனாவின் இந்த நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
ஆனாலும் எதையும் பொருட் படுத்தாத சீனா தனது முயசிகளைத் தொடர்ந்து வருவதுடன் தனது இந்த நில விரிவாக்கம், தென் சீனக் கடலில் பிரயாணிக்கும் கப்பல்களில் ஏற்படும் அனர்த்தங்களின் போது உதவுதல், கப்பல்களுக்கு எரிபொருள் வழங்குதல் போன்ற சேவைகளை செய்வதே பிரதான நோக்கம் என்றும் தேவைப் படும் பொழுது இராணுவத் தேவைகளுக்காகவும் பயன் படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
சீனா Spratly Islands இல் இதுவரை உருவாக்கியுள்ள நில உருவாக்கத்தின் செய்மதிப்பட்டம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.