Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

மண்ணின் கலைஞர்கள் இருவரின் மறைவு

பிரசுரிக்கபட்ட திகதி: 13/11/2015
About writer: ச.ச.முத்து
மண்ணின் கலைஞர்கள் இருவரின் மறைவு
 
சித்திரவேல்சாமியும்,மோகணண்ணாவும் மறைந்துவிட்டார்கள் என்பது எல்லா மறைவுச் செய்திகளையும் போல இயல்பாக எடுத்து மிக இயல்பாகவே எம்மை கடந்து போய்விடக்கூடியவை அல்ல.
 
ஏனென்றால் இந்த இருவரும் எமக்கு இன்னொரு உலகத்தை தமது கலைப்படைப்புகள் மூலம் திறந்துவைத்த கலைஞர்கள். ஒருவர் எமது பாரம்பரியமான கூத்துக்கலையை அதன் அத்தனை அழகியலுடனும் அதன் மிகச்செறிவான பண்பாட்டுவளத்துடனும் எமக்கு எடுத்து சொன்னவர்.(சித்திரவேலாயும்)
 
அப்பாத்துரை சித்திரைவேலாயுதம்
கூத்துகலையின் அத்தனை பாத்திரங்களுக்கும் ஏற்றதான ஒரு சாரீரவளமும், உச்சஸ்தாயில் பாடினாலும் பிசிர் வீழாத அற்புதமான குரல் வளமும் சித்திரவேலாயுதம் அவர்களின் சொத்து.
 
இன்னொருவர் மானுடத்தின் மிக முன்னோடியான வெளிப்படுத்தும் கலையான ஓவியத்தை எமது மண்ணுக்கே உரியதாக எமக்கு காட்டியவர்.(மோகனதாஸ்)
 
நிறங்களை கலப்பதிலும் அதனை மிக சாதாரணமாக தேவைப்படும்படும் இடங்களில் தீட்டி நாம் எப்போதும் பார்த்து வந்த அதே கடல்அலைகளதும், கடற்கரையினதும் காட்சிகளை மிகப்புதிதான ஒரு கோணத்தில் எமக்குள் செலுத்தி பரசவப்படுத்திய ஓவியர் மோகனதாஸ்.
 
இந்த இருவரினதும் மரணச்சேதி கேட்டபோது எமது பள்ளிநாட்களில் இந்த இருவரையும் எத்தனை அண்ணாந்து பார்த்து இருக்கின்றோம் என்ற நினைவுகளே மீள எழுகின்றன.
 
ஒரு முழுஇரவு முழுதும் அரங்கத்தை ஆளுமை செய்த அந்த குரலுக்கு சொந்தகார மனிதரான சித்திரவேலாயுதம் அவர்களை அதன் பின்னர் தூரத்தே கண்டாலும்கூட அத்தனை காத்தான் பாத்திரமும் அவற்றின் சாகசங்களும், கிளியாக மாறிடும் அற்புதமும், ஏழுகடல் தாண்டிய சாதனையும்,கழுமரத்தில் ஏறுவதற்காக ஒவ்வொரு படியாக ஏறியபொழுதின் காட்சிகளும் எப்போதும் எமக்குள் எழுந்து மிகப்பெரும் மரியாதையுடனேயே அவரை கடப்போம்.
 
ராமதாஸ் மோகனதாஸ்
அதன்பின்னர் எமது தாயகத்தின் அத்தனை முனைகளிலும் காத்தான்கூத்துகளையும், வடமோடி கூத்துகளையும் பார்த்திருந்த பொழுதுகளில் ஏனோ அவற்றுடன் எம் ஊரின் பெரும் கலைஞன் சித்திரவேலாயுதம் அவர்களை பொருத்தி ஒப்பிட்டு பார்த்து பெருமை கொள்வது பழக்கமாக இருந்தது.
 
அதனை போலவே எமது வயது வளரவளர ஓவியத்தின் அத்தனை நிறத்தேர்வுகளையும் அதன் ஒவ்வொரு கோடுகளும் திறந்துவைக்கும் புதிய சிந்தனைவெளியையும், புரிந்துகொண்டபோதும் எனக்கு ஏனோ எம் சிறுவயதில் வல்வை காய்கறிச்சந்தைக்கு முன்னால் உள்ள கிட்டங்கியில் மோகனதாஸ் வரைந்து கொண்டிருந்த கண்ணாடி ஓவியங்களின் அழகு என்னவோ மிகமிக மனதுக்கு இதமானதாகவே இன்றும் தொடர்ந்துவருகிறது..
 
இப்போதும்கூட இத்தனைக்கும் ஓவியத்தின் பின்நவீனத்துவ பாணி,அதன் வான்காக் பாணி, மொனெட்பாணி என்று அத்தனை ஓவியமரபுகளும் தெரிந்த பின்னும்கூட மோகனதாஸ் என்ற என்மண்ணின் கலைஞனை எந்தவொரு விமர்சனங்களும் இல்லாமல் மனது ஏற்கிறது என்றால் அவன் எம் சிறுவயது ஆகர்சங்களில் ஒருவராக இருந்திருந்தார் என்பதாலேயே.
 
நிற்க,
 
இந்த இருபெரும் கலைஞர்களையும் எட்ட இருந்து பார்த்து ரசித்தபொழுது தாண்டி இவர்களை அணுகி பழக ஏற்பட்ட சந்தர்பங்களையும் இதில் குறிப்பிட்டாக வேண்டும்.
 
எமது இளம்பறவைகள் கழகத்தால் நானும் வல்வெட்டித்துறை குமார் அச்சகத்தின் இரண்டாவது மகன் குமாரும் இணைந்து பறவை என்று ஒரு கையெழுத்து இதழை சந்தி வாசிகசாலையில் ஆரம்பித்தோம்.
 
அதன் முதலாவது இதழுக்கு குமார் (கிருஸ்ணகுமார்) வரைந்த ஒரு ஓவியம் யாசீர்அரபாத் ஒரு கையில் ஒலிவ் இலையுடன் ஐநா மண்டபத்தில் நடந்துவரும் தோற்றம். ஏறத்தாள பத்து பதினைந்து மாதிரிகள் வரைந்து கொண்போய் மோகனதாஸ் அண்ணாவிடம் கொடுத்து அதில் மாற்றங்களை திருத்தங்களை கேட்டோம்.அப்போதுதான் எனக்கும் குமாருக்கும் ஒருவரின் கை எப்படி வரையப்படவேணும் ஒரு முகத்தின் பக்கவாட்டு தோற்றத்தின் ஒளிபடும் இடங்கள் எவை என்று ஏராளம் சொல்லி தந்தார் மோகன்அண்ணா.
 
அன்று மோகன்அண்ணாவிடம் ஓவியத்தின் நுட்பங்களை  படித்த குமாரை வரலாறு தமிழர்களின் வரலாற்றின் மிகப்பெரும் அதிமானுடனாக்கியது. குமார் உருவாக்கிய அத்தனை வெளியீடுகள், பத்திரிகைகள், பிரசுரங்கள் எல்லாவற்றிலும் அவனின் நிறத்தேர்வுகள், பக்க லைன்கள் என்று அனைத்து தேர்வுகளும் ஒரு அற்புதமான தெரிவாக இருந்ததற்கு காரணங்களில் மோகன் ஆட்ஸ்ம் ஒருவர்.
 
ஏன், குமார் பின் பொருநாள் மெக்சிகோ நாட்டின் மெக்சிகோசிட்டியில் ஓவியத்தை ஆழ கற்று திரும்பி அவன் வரைந்த ஓவியங்களை பற்றி அவன் என்னுடன் கதைத்த பொழுது ஒவ்வொன்றிலும் மோகன் அண்ணா அன்று ஆரம்பித்து வைத்த ஓவியகலை அறிமுகத்தை மறக்காமல் நினைவு கொண்டவன்.
 
அதனை போலவே எமது பறவை இதழின் முலாவது இதழுக்கு எம் பண்பாட்டின் மிகவும் செழுமை மிக்க கூத்துகலையின் கலைஞன் சித்திரவேலாயுதம் அவர்களையே நேர்கண்டு எழுத என்று முடிவு எடுத்து சென்றபோது எந்தஒரு அறிமுகமும் இல்லாத எமக்கு சிறிய வயதவர்களான எமக்கு மிக ஆறுதலாக எல்லாம் விளக்கி எம் கேள்விகளுக்கு பதிலையும் பாட்டுகளையும் தந்த அந்த அற்புத கலைஞன் என்றும் நினைவுகளில் இருக்க வேணும்.
 
நாளையும் ஏதோ ஒரு இரவுப்பொழுதில் காற்றில் மிதந்துவரும் காத்தான் பாடல்களில், தமிழர்களின் பண்பாட்டு குறியீடுகளில் சித்திரவேலாயுதம் என்றென்றும் இருந்துவருவார்.
 
சத்தியநாதன், வைத்திலிங்கப்பிள்ளை புலவர், பண்டிதர்
 
 
இன்று நாம் பார்க்கும் சத்தியநாதனின் படத்துக்கு ஏற்றப்பட்ட நிற மெருகும் - சத்தியநாதனின் உடையும் அதனை போலவே பண்டிதரின் வெறும் அடையாள அட்டை போட்டோவுக்கு தத்துரூபம் கொடுத்த - இயற்றமிழ் போதகாசிரியர் வைத்திலிங்கம்பிள்ளை அவர்களுக்கு உயிர் ஊட்டியமை - அந்த மோகன்அண்ணா நாளை நாம் பார்க்கும் அத்தனை ஓவியபொழுதுகளிலும் நினைவிருப்பார்.
 
பண்பாடு என்பது வேறு என்ன..? இப்படியான மனிதர்கள் தத்தம் பங்குக்கு முன்னெடுத்த கலை வெளிப்பாடுகளின் மொத்த திரட்சிதானே..
 
என்றும் நினைவு கொள்ள வேண்டியவர்கள் இவர்கள். எம் மண்ணின் கலை வெளிப்பாடு இவர்கள்.
 
ச.ச.முத்து 
லண்டன் 
 
பிற்குறிப்பு 
கட்டுரையில் சில வரிகள் திருத்தப்பட்டுள்ளன. ஆசிரியரின் எழுத்திற்கேற்ப கட்டுரையை பிரசுரிக்க முடியாமைக்காக வருந்துகின்றோம்.

 


பிந்திய 25 கட்டுரைகள்:
அப்பாத்துரை சித்திரவேலாயுதம் அவர்களின் நினைவலைகளில்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/12/2015
ஓவியர் மோகன் – வல்வையின் ஒரு பெரும் சொத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 15/11/2015
இயற்கையிலேயே கலைத்திறமை வாய்க்கப்பெற்றவர் மோகனதாஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2015
பல்கலைக்கழகம் செல்லாமலே கலாபூசனம் விருதுபெற்ற மாகலைஞன் சித்திரை வேலாயுதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2015
தொழில் வழிகாட்டல் என்றால் என்ன?
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2015
ஆற்றங்கரை வேலன் திருத்தலமும் அவனுக்காயாகிவரும் மகோற்சவக் காலப் பெருவிழாக்களும்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2015
நினைவுகள் ஒன்றித்த ஒருஇடம் - வல்வை முத்துமாரியம்மன் ஆலயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/04/2015
இன்று 62 வருடங்களைக் கடக்கும் நீச்சல்வீரன் நவரத்தினசாமியின் சாதனை – ஒரு ஆவணப் பதிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2015
பாக்குநீரிணையை முதன்முதலில் நீந்திக்கடந்து சாதனை புரிந்த மறத்தமிழனுக்கு ஒரு நினைவு சிலை
பிரசுரிக்கபட்ட திகதி: 23/03/2015
அதிக சத்த ஓசைகளை கேட்பதால் ஒரு பில்லியன் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் – WHO
பிரசுரிக்கபட்ட திகதி: 07/03/2015
“நன்மாணக்கர்களை உருவாக்கிய ஆசிரியப் பெருந்தகை நீலகண்டன் சேர்"
பிரசுரிக்கபட்ட திகதி: 02/03/2015
யாழ்ப்பாணத்தின் மாற்று மின்வலு தேடலுக்கான தருணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/01/2015
TSU (சூ) என்றால் என்ன
பிரசுரிக்கபட்ட திகதி: 07/01/2015
4 பிரிவு வகுப்புக்களை நிறைவுசெய்யும் CINEC யாழ் கிளை
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2014
வரலாற்றில் தனியாகப் பதியப்பட வேண்டிய வல்வையின் பட்டக்கலை - கி.செல்லதுரை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2014
தங்கவடிவல் மாஸ்ரர் ஒரு வரலாறு - மாதவி சிவசீலன்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/08/2014
பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பி - வ.ஆ.அதிரூபசிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/07/2014
இறந்தும் இறவா மாமனிதர் பேராசிரியர் துரைராஜா- முருகவேள் சண்முகன்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/06/2014
அக்கரை மக்களிடம் அக்கறை வேண்டாமா? ஆ.தீபன்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2014
வைத்தியண்ணா வல்வையின் மகத்தான ஆளுமையின் வடிவம் - கி.செல்லத்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2014
வடபகுதியின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பருத்தித்துறை துறைமுகமும் இறங்குதுறையும் – ஒரு ஆய்வுக் கட்டுரை - அ.ஆதவன்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2014
வல்வையின் பிரபல்யங்கள் – அமரர் திரு.சி.மாணிக்கவாசகர் (C.C.S)
பிரசுரிக்கபட்ட திகதி: 02/02/2014
ஹரிதாஸ் - A brave seaman from VVT
பிரசுரிக்கபட்ட திகதி: 04/01/2014
வல்வையின் சேவையாளர்கள் – 2013, ஆழ்வார்பிள்ளை ஆறுமுகக் கடவுள்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/12/2013
நடராஜர் ஆருத்திரா தரிசனம் நாளை வல்வெட்டித்துறை சிவன் கோயிலில் - ஒரு பார்வை
பிரசுரிக்கபட்ட திகதி: 17/12/2013

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai