Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

இறந்தும் இறவா மாமனிதர் பேராசிரியர் துரைராஜா- முருகவேள் சண்முகன்

பிரசுரிக்கபட்ட திகதி: 11/06/2014
About writer: முருகவேள் சண்முகன்

இறந்தும் இறவா மாமனிதர்  பேராசிரியர் அ. துரைராஜா  ஆம் நீங்கள் வாசிப்பது நிஜம்தான் இறந்தும் இறவா மாமனிதர் என்ற அடைமொழி கற்பனையாக இருந்தாலும் அவ் அடைமொழி பேராசிரியர் அ.துரைராஜாவின் பெயரின் முன்னால் இருக்கும்போது அது உயிரோட்டமாகவே இருக்கின்றது. அவ்வாறான மாமனிதரை இன்றைய அவரது நினைவு தினத்தில் நினைவு கூறுவது சாலப்பொருத்தமாக இருக்கும்.

பேராசிரியர் துரைராஜா 1934 ஆம் ஆண்டு பெரும் தலைவர்களை உலகுக்கு வழங்கி பெருமைபட்டுக் கொள்ளும் கார்த்திகை மாதம் 10 ஆம் திகதி வேலுப்பிள்ளை அழகையாவுக்கும்,செல்லமாவுக்கும் மகனாக யாழ்ப்பாணத்தின் மூளை என்றழைக்கபடும் வடமராட்சி பிரதேசத்தில் அவதரித்தார். இவர் தனது ஆரம்பக்கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியிலும், பின் தனது உயர்கல்வியை பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியிலும் பயின்றிருந்தார்.

பேராசிரியர் அவர்கள் உயர்தரத்தில் கணித பிரிவில் முதல் மாணவனாக 1953 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்துக்கு தெரிவானார். அன்றைய காலகட்டத்தில் கொழும்பில் இயங்கிய இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பொறியியற்பீடத்தில்  குடிசார் பொறியற் கற்கைநெறியை 1957 ஆம் ஆண்டு நிறைவு செய்து விஞ்ஞானப்பட்டம் பெற்றார். அதன் பின்னர் மேற்படி பல்கலைக்கழகத்திலேயே 1958 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை குடிசார் பொறியியல் விரிவுரையாளராக கடமையாற்றினார்.

பின்னர் 4 மாதங்கள் பொதுச்சேவை திணக்களத்தின் இளம் உதவி பொறியலாளராக பணிபுரிந்தார். தொடர்ந்து 'கேம்ப்ரிச்' பல்கலைக்கழகத்துக்கு 'ஸ்கொலர்ஷிப்பில்' சென்ற பேராசிரியர் Kenneth H. Roscoe அவர்களின் கீழ் ஆராய்ச்சி மாணவனாக அக்டோபர் 1958 இலிருந்து 1961 டிசம்பர் வரை மணல்துறை சார்ந்த ஆராய்ச்சிகளுக்காக பணியாற்றியிருந்தார்.

இவ் ஆராய்ச்சிகளின் பயனாக 'துரை விதி' எனும் மணல்துறை சார்ந்த விதியொன்றை நிறுவினார். இன்றும் குடிசார் பொறியியலில் கற்பிக்கப்படும் Cam- clay locus ஆனது துரை விதியிலிருந்தே பெறப்படுகின்றது. இறுதியாக 1962ஆம் ஆண்டு ஜூன் மாதம் தனது பி‌எச்‌டி பட்டத்தை நிறைவு செய்திருந்தார்.

பின் சிறிது காலம் பிரித்தானிய கம்பெனியான  'Terreasearch' என்ற நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு இலங்கைக்கு திரும்பி இலங்கை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இணைந்து கொண்டார். அதன் பின் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் 1971 ஆம் ஆண்டு பேராசிரியராக இணைந்து கொண்டார்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இணைந்துகொள்ள முன்னர் 'வாட்டர்லூ' பல்கலைக்கழகத்தின் வருகைதரும் விரிவுரையாளரகாவும் இருந்துள்ளார்.பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியற்பீடத்தின் பீடாதிபதியாகவும் மே 1975 தொடக்கம்  செப்டெம்பர் 1977 வரையும், பெப்ரவரி 1982 தொடக்கம்  பெப்ரவரி 1985 வரையான இருவேறுபட்ட காலங்களில் பணியாற்றியுள்ளார்.

மேலும் பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைகழகத்தின் வருகை தரு விரிவுரையாளராகவும் அக்டோபர் 1977 முதல் டிசம்பர் 1978 வரை பணியாற்றியுள்ளார்.அதன் பின் இலங்கை திறந்த பல்கலைக்கழக பொறியியற்பீடத்தின் பீடாதிபதியாக ஏப்ரல் 1987 முதல் ஆகஸ்ட் 1988 வரை பணியாற்றினார்.

அதன் பின் 1988 செப்டெம்பர் மாதம் போர்ச்சூழல் காரணமாக எவரும் வரத்தயங்கிய தருணம் துணிச்சலுடன் யாழ் பலகலைக்கழகத்தின் துணைவேந்தராக, 'பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு' யாழ் பல்கலைக்கழகத்தில் பொறியியற்பீடம் ஆரம்பிக்கபடும் என்ற கொடுத்திருந்த வாக்குறுதியுடன் பதவியேற்றுக்கொண்டார்.

ஆனாலும் பேராசிரியரின் கனவு  36 வருடங்களின் பின்பே இவ்வருடம் மாசி மாதம் கிளிநொச்சி அறிவியல் நகரில்  யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியற் பீட அங்குரார்ப்பண நிகழ்வுடன் பூர்த்தியாகியுள்ளது. பேராசிரியர் அவர்கள் 1994 ஆம் ஆண்டு கொடிய நோயின் பிடியில் அகப்படும் வரைக்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக அளப்பெரும் சேவை புரிந்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலம் தனது .வதிவிடமான வடமராட்சியின் வதிரி பிரதேசத்திலிருந்து பல்கலைக்கழகத்துக்கு வல்லை வெளியினூடாக போர் மேகங்கள் சூழ்ந்திருந்த காலங்களில் 30 ற்கும் மேற்பட்ட கிலோமீட்டர்கள் தூரத்தை  மீதி வண்டியினூடே பயணித்திருந்தார் .

பேராசிரியர் அவர்கள் பேராதனை பல்கலைக்கழத்தில் இருந்த காலத்திலேயே தற்போது காணப்படும் அக்பர் பாலம் நிர்மாணிக்கபட்டது. இப்பாலம் சிங்கள பேராசிரியர் ஒருவர் விட்ட சவாலை ஏற்று மகாவலிகங்கைக்கு குறுக்கே ஒரேயொரு தூணை  எழுப்பி பேராசிரியரின் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டது. மேலும் பேராசிரியர் நினைவாக பேராசிரியர் துரைராஜா கிண்ணம் எனும் சுற்றுபோட்டி வருடாவருடம் பேராதனை, கொழும்பு, மொரட்டுவ பல்கலைகழகங்களுக்கிடையில் இன்றும் இடம்பெற்றுவருகிறது.

சிறந்த ஒழுக்க சீலராகவும், பழகுவதற்கு இனிமையானவரான பேராசிரியர் எளிமையான வாழ்க்கை வாழ்ந்திருந்தார். மேலும் பேராசிரியர் துரைராஜாவின் மாணவன் என்றால் அதற்கு ஒரு தனிமதிப்பு இன்றும் உள்ளது. தமிழர்கள் சிறந்து விளங்கவேண்டும் என்பதற்காக பேரளவு உதவிகளை இக்கட்டான காலகட்டத்தில் செய்ததால்தான் பேராசிரியர் இன்று மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

90 களில் யாழ்ப்பாணம் பொருளாதார சிக்கலில் தவித்திருந்த பொழுது, எல்லாத்தரத்திலான எல்லா வகையிலான கல்வியாளர்களையும் தொழில் நுட்பவியலாளர்களையும் தொழிலாளர்களையும் நிர்வாகிகளையும் சிவில் சமூகவியலாளர்களையும் ஒன்றிணைத்து பொருளாதார அபிவிருத்திக்கான எதிர்கால திட்டமிடலை மேற்கொண்டிருந்தார்.

தமிழர் நல்ல கல்வியைப் பெறவேண்டும் என்பதற்காக பல்கலைக்கழக கல்வி முறையில் தொழிலாளர் கல்வி வெளியார் கற்கைபோன்றவற்றை அறிமுகப்படுத்தி யாழ்ப்பாண சமூகத்தை பல்கலைக் கழகம் வரைகொண்டு வந்தவர். வடக்குக் கிழக்கு தமிழர்களில் பெரும்பான்மையானோர் விவசாயிகளாக இருப்பதால் விவசாய பீடத்தை கிளிநொச்சியில் நிறுவினார்.

பேராசிரியர் மணவாழ்க்கையில் ராஜேஸ்வரியை கரம்பிடித்து இல்வாழ்க்கையின் பேறாக தம்பதியினருக்கு 3 மகள்களும் 2 மகனும் உள்ளனர். நல்ல மனிதர்களை இவ்வுலகம் நீண்ட நாட்கள் தன்னுடன் வைத்திருப்பதில்லை போலும் பேராசிரியரை இன்றையநாளில் இருபது வருடங்களுக்கு முன் தன்னுடன் 1994ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி அழைத்துகொண்டது.

பேராசிரியர் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம்,. இலங்கை சிவில் பொறியிலாளர்கள் அமைப்பு, தேசிய விஞ்ஞான அக்கடமி என்பவற்றின் தலைவராகவும் இருந்து அளப்பெரும் சேவைகள் ஆற்றியுள்ளார்.

1987 ஆம் ஆண்டு இடம்பெற்ற அனர்த்தங்களில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி முற்றிலுமாக சிதைவடைந்திருந்தபோது, வெளிநாடுகள் சென்று கல்லூரியின் நிலையினை எடுத்துரைத்து அங்குள்ள பழையமாணவர்களை ஒன்று திரட்டி நிதி சேகரித்து இன்றைய உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி நிமிர்ந்து நிற்பதற்கு பேராசிரியரே துணை புரிந்தார்.

இன்றும் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் நூலகம் அமைந்த கட்டிடதொகுதி பேராசிரியரின் பெயராலேயே பேராசிரியர் துரைராஜா கட்டிடதொகுதி என்றே அழைக்கபடுகிறது.


 


பிந்திய 25 கட்டுரைகள்:
அப்பாத்துரை சித்திரவேலாயுதம் அவர்களின் நினைவலைகளில்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/12/2015
ஓவியர் மோகன் – வல்வையின் ஒரு பெரும் சொத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 15/11/2015
மண்ணின் கலைஞர்கள் இருவரின் மறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 13/11/2015
இயற்கையிலேயே கலைத்திறமை வாய்க்கப்பெற்றவர் மோகனதாஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2015
பல்கலைக்கழகம் செல்லாமலே கலாபூசனம் விருதுபெற்ற மாகலைஞன் சித்திரை வேலாயுதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2015
தொழில் வழிகாட்டல் என்றால் என்ன?
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2015
ஆற்றங்கரை வேலன் திருத்தலமும் அவனுக்காயாகிவரும் மகோற்சவக் காலப் பெருவிழாக்களும்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2015
நினைவுகள் ஒன்றித்த ஒருஇடம் - வல்வை முத்துமாரியம்மன் ஆலயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/04/2015
இன்று 62 வருடங்களைக் கடக்கும் நீச்சல்வீரன் நவரத்தினசாமியின் சாதனை – ஒரு ஆவணப் பதிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2015
பாக்குநீரிணையை முதன்முதலில் நீந்திக்கடந்து சாதனை புரிந்த மறத்தமிழனுக்கு ஒரு நினைவு சிலை
பிரசுரிக்கபட்ட திகதி: 23/03/2015
அதிக சத்த ஓசைகளை கேட்பதால் ஒரு பில்லியன் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் – WHO
பிரசுரிக்கபட்ட திகதி: 07/03/2015
“நன்மாணக்கர்களை உருவாக்கிய ஆசிரியப் பெருந்தகை நீலகண்டன் சேர்"
பிரசுரிக்கபட்ட திகதி: 02/03/2015
யாழ்ப்பாணத்தின் மாற்று மின்வலு தேடலுக்கான தருணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/01/2015
TSU (சூ) என்றால் என்ன
பிரசுரிக்கபட்ட திகதி: 07/01/2015
4 பிரிவு வகுப்புக்களை நிறைவுசெய்யும் CINEC யாழ் கிளை
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2014
வரலாற்றில் தனியாகப் பதியப்பட வேண்டிய வல்வையின் பட்டக்கலை - கி.செல்லதுரை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2014
தங்கவடிவல் மாஸ்ரர் ஒரு வரலாறு - மாதவி சிவசீலன்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/08/2014
பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பி - வ.ஆ.அதிரூபசிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/07/2014
அக்கரை மக்களிடம் அக்கறை வேண்டாமா? ஆ.தீபன்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2014
வைத்தியண்ணா வல்வையின் மகத்தான ஆளுமையின் வடிவம் - கி.செல்லத்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2014
வடபகுதியின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பருத்தித்துறை துறைமுகமும் இறங்குதுறையும் – ஒரு ஆய்வுக் கட்டுரை - அ.ஆதவன்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2014
வல்வையின் பிரபல்யங்கள் – அமரர் திரு.சி.மாணிக்கவாசகர் (C.C.S)
பிரசுரிக்கபட்ட திகதி: 02/02/2014
ஹரிதாஸ் - A brave seaman from VVT
பிரசுரிக்கபட்ட திகதி: 04/01/2014
வல்வையின் சேவையாளர்கள் – 2013, ஆழ்வார்பிள்ளை ஆறுமுகக் கடவுள்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/12/2013
நடராஜர் ஆருத்திரா தரிசனம் நாளை வல்வெட்டித்துறை சிவன் கோயிலில் - ஒரு பார்வை
பிரசுரிக்கபட்ட திகதி: 17/12/2013

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai