வல்வை உட்பட வடமராட்சியிலும் நேற்று இரவிலிருந்து மழை
பிரசுரிக்கபட்ட திகதி: 20/05/2016 (வெள்ளிக்கிழமை)
தற்பொழுது நிலவி வரும் அசாதாரண காலநிலை காரணமாக வல்வெட்டித்துறை உட்பட வடமராட்சியின் பல பகுதிகளிலும் நேற்று இரவிலிருந்து இன்று காலை வரை ஓரளவு மழை பெய்து வருகின்றது. யாழ் தீபகற்பத்திற்கு வடக்கு வட கிழக்காக வட கிழக்கு நோக்கி நகரும் புயல் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருவதும், குறித்த அசாதாராண காலநிலை தொடர்ந்து நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் கொழும்பு மற்றும் அதைனைச் சூழவுள்ள பகுதிகளிலும் நேற்றைய தினம் அவ்வப்போது மழை பெய்துவருகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.