நானும் தம்பியும் அதிரூபசிங்கம் மாஸ்டரிடரிடம் கல்வி கற்றவர்கள் - வேலுப்பிள்ளை மனோகரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/07/2017 (புதன்கிழமை)
கடந்த 6 ஆம் திகதி மாஸ்டரின் மறைவுச் செய்தியைப் பார்த்தவுடன் எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
வல்வையில் சிவகுரு வித்தியாசாலையில் மூத்த படித்த இளைஞர்களால் இரவுப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட போது, நான் மாஸ்டரிடம் மாணவனாக இருந்தேன்.
இந்த இரவுப் பாடசாலையில் என்னைத் தொடர்ந்து எனது தம்பி பிரபாகரனும் மாஸ்டரிடம் மாணவனாக இருந்துள்ளார்.
நான் வல்வையில் இருந்த காலத்தில் இவர் மாஸ்டர் மட்டும் இல்லை. இலங்கை போக்குவரத்துச் சபையில் நடத்துனராக இருந்த இவர், செல்வச் சந்நிதி முருகன் கோயில் மூத்த பூத் தொண்டர், அறிவிப்பாளர், மல்யுத்த வீரர், நாடகக் குழு இயக்குனர், நடிகர், பட்டி மன்ற பேச்சாளர், எழுத்துலகில் ஆசிரியர்.. என இப்படி எந்த நிகழ்விலும் இவரின் பங்களிப்பு இருக்கும்.
மாஸ்டர் நடத்துனராக பணிபுரிந்த பேருந்தில் நான் பல தடவை பயணம் செய்திருக்கின்றேன். அப்பொழுது இவருடன் பேசும் பொழுது, நான் ஏதனும் கூறினால் ‘ஓ அப்படியோடா’ எனக் கேட்பார். அந்தக் குரல் இப்போதும் என் காதில் ஒலிக்கின்றது.
இவருடன் பயணம் செய்யும் பொழுது பயணத் தூரமும் தெரியாது. ஒரே கலகலப்பாக இருக்கும். ஒருவரிடமும் கடிந்து பேச மாட்டார். இவர் மறைந்தாலும் இவருடன் பழகியவர்கள் மனங்களில் என்றும் வாழ்வார்.
நான் புலம் பெயர்ந்து டென்மார்க்கில் வசித்து வந்த போதும், மாஸ்டர் ஸ்தாபகராக இருந்து நடாத்தும் வல்வெட்டித்துறை.ஒஆர்ஜி இணையதளத்தை பார்வையிடுவதன் மூலம், தினந்தோறும் ஊரில் நடைபெறும் நிகழ்வுகளையும், ஊர் வரலாறு, கோவில் நிகழ்வுகள் போன்றவற்றை புகைப் படங்கள் மூலம் பார்க்கும் போது எனக்கு ஊரில் இருப்பது போன்ற உணர்வே ஏற்படும்.
இவரின் மறைவால் இவர் குடும்பத்தினருக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள். காலம் உள்ளவரை இவர் புகழ் நிலைத்திருக்கும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.